• Sep 15 2024

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டம்!

Anaath / Aug 30th 2024, 2:08 pm
image

Advertisement

அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது தினமானது இன்றையதினம் சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்தவகையில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று இன்று மதியம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, வாய்களை கறுப்பு துணியால் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த போராட்டத்தில் ஏராளமான  பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டம் அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது தினமானது இன்றையதினம் சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகிறது.அந்தவகையில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் ஒன்று இன்று மதியம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டமானது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, வாய்களை கறுப்பு துணியால் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் ஏராளமான  பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement