• Mar 20 2025

முன்கூட்டியே பெறப்பட்ட பரீட்சை வினாத்தாள் - காத்தான்குடி சா.தரப் பரீட்சை மண்டபத்தில் குளறுபடி

Chithra / Mar 20th 2025, 7:25 am
image


க.பொ.த.சா.தரப் பரீட்சை தமிழ் இலக்கிய பாட வினாத்தாள் பகுதி, ஒன்றரை மணிநேரம் முன்னதாகப் பெற்றதனால் மண்டப இலக்கம் ஒன்றில் பரீட்சைக்குத் தோற்றிய 150 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடி மத்திய கல்லூரியில் நேற்றுமுன்தினம் தமிழ் பாட பரீட்சை எழுதிய மாணவர்களுக்கே  பரீட்சை மண்டபத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தை மட்டுப்படுத்தி ஒரு மணித்தியாலமும் நாற்பது நிமிடங்கள் கால அவகாசம் இருந்தும் அவை மறுக்கப்பட்டு விடைத்தாள்களை பரீட்சை மண்டபத்தில் கடமையாற்றிய மேற்பார்வையாளர்களால் பெறப்பட்டுள்ளது.

இதனால் மாணவர் முழுமையாக பரீட்சை வினாக்களுக்கு விடையளிக்க தவறியுள்ளதுடன் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் காத்தான்குடி மத்திய கல்லூரியில் இரண்டு பரீட்சை மண்டபங்களில் பரீட்சைகள் நடைபெற்ற போதிலும் ஒரு மண்டபத்திலே இவ்வாறு அநீதி இடம்பெற்றுள்ளது.

இதுபற்றி மாணவர்களும் பெற்றோரும் பழைய மாணவர் சங்கத்தினரும் ஊடகவியலாளர் சந்திப்பில் பின்வருமாறு கூட்டிக்காட்டியுள்ளனர்.


முன்கூட்டியே பெறப்பட்ட பரீட்சை வினாத்தாள் - காத்தான்குடி சா.தரப் பரீட்சை மண்டபத்தில் குளறுபடி க.பொ.த.சா.தரப் பரீட்சை தமிழ் இலக்கிய பாட வினாத்தாள் பகுதி, ஒன்றரை மணிநேரம் முன்னதாகப் பெற்றதனால் மண்டப இலக்கம் ஒன்றில் பரீட்சைக்குத் தோற்றிய 150 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.காத்தான்குடி மத்திய கல்லூரியில் நேற்றுமுன்தினம் தமிழ் பாட பரீட்சை எழுதிய மாணவர்களுக்கே  பரீட்சை மண்டபத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.வினாத்தாள்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தை மட்டுப்படுத்தி ஒரு மணித்தியாலமும் நாற்பது நிமிடங்கள் கால அவகாசம் இருந்தும் அவை மறுக்கப்பட்டு விடைத்தாள்களை பரீட்சை மண்டபத்தில் கடமையாற்றிய மேற்பார்வையாளர்களால் பெறப்பட்டுள்ளது.இதனால் மாணவர் முழுமையாக பரீட்சை வினாக்களுக்கு விடையளிக்க தவறியுள்ளதுடன் மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவம் காத்தான்குடி மத்திய கல்லூரியில் இரண்டு பரீட்சை மண்டபங்களில் பரீட்சைகள் நடைபெற்ற போதிலும் ஒரு மண்டபத்திலே இவ்வாறு அநீதி இடம்பெற்றுள்ளது.இதுபற்றி மாணவர்களும் பெற்றோரும் பழைய மாணவர் சங்கத்தினரும் ஊடகவியலாளர் சந்திப்பில் பின்வருமாறு கூட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement