• Sep 20 2024

யாழ்.மாவட்டத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி..!

Sharmi / Sep 17th 2024, 9:30 am
image

Advertisement

யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட  தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக குழுக் கடமைகளில் ஈடுபடும் அலுவலர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வாக்கெண்ணும் நிலையமாகச் செயற்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் குழுக்களின் செயற்பாட்டில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களது சிறப்பான தொடர்பாடல் திறன் மூலம் வினைத்திறனாகச் செயற்பட்டுத் தேர்தல் கடமைகளுக்காக இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் நலன்களைப் பேணிச் சிறப்பான செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் வலியுறுத்தினார்.



யாழ்.மாவட்டத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி. யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட  தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக குழுக் கடமைகளில் ஈடுபடும் அலுவலர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.வாக்கெண்ணும் நிலையமாகச் செயற்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் குழுக்களின் செயற்பாட்டில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களது சிறப்பான தொடர்பாடல் திறன் மூலம் வினைத்திறனாகச் செயற்பட்டுத் தேர்தல் கடமைகளுக்காக இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் நலன்களைப் பேணிச் சிறப்பான செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement