• Mar 10 2025

ஜனாதிபதி அநுரவுக்கு பொருளாதார கொள்கை என்பதொன்று கிடையாது! குற்றம்சாட்டும் உதய கம்மன்பில

Chithra / Mar 10th 2025, 8:57 am
image


நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சகல தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுவோம் எனவும்  அரசாங்கத்தின் மிதமிஞ்சிய பொய்யால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளார்கள் என்றும் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

சர்வஜன அதிகார கட்சியின் காரியாலயத்தில் நேற்ற ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சகல தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுவோம்.

அரசாங்கத்தின் மிதமிஞ்சிய பொய்யால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளார்கள். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பொருளாதார கொள்கை என்பதொன்று கிடையாது. ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையாக விமர்சித்தார். 

ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டார். ஆனால் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கைகளை எவ்வித மாற்றமுமில்லாமல் அமுல்படுத்துகிறார். நாணய நிதியத்தை தஞ்சமடைந்து புகழ்பாடுகிறார்.

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை எவ்வாறானது என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தெரியாமல் அரசாங்கம் தற்போது தடுமாற்றமடைந்துள்ளது.என்றார்.

ஜனாதிபதி அநுரவுக்கு பொருளாதார கொள்கை என்பதொன்று கிடையாது குற்றம்சாட்டும் உதய கம்மன்பில நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சகல தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுவோம் எனவும்  அரசாங்கத்தின் மிதமிஞ்சிய பொய்யால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளார்கள் என்றும் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.சர்வஜன அதிகார கட்சியின் காரியாலயத்தில் நேற்ற ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சகல தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுவோம்.அரசாங்கத்தின் மிதமிஞ்சிய பொய்யால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளார்கள். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பொருளாதார கொள்கை என்பதொன்று கிடையாது. ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையாக விமர்சித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டார். ஆனால் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார கொள்கைகளை எவ்வித மாற்றமுமில்லாமல் அமுல்படுத்துகிறார். நாணய நிதியத்தை தஞ்சமடைந்து புகழ்பாடுகிறார்.தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை எவ்வாறானது என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தெரியாமல் அரசாங்கம் தற்போது தடுமாற்றமடைந்துள்ளது.என்றார்.

Advertisement

Advertisement

Advertisement