மே முதல் வாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வியட்நாமுக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. வெசாக் தின நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் வியட்நாமுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா. வெசாக் தின நிகழ்வுகள் மே 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதிவரை ஹோ சி மின் நகரில் நடைபெறுகின்றது.
85 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட 2 ஆயிரத்து 700 விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, கம்போடியா, நேபாளம், லாவோஸ் ஆகிய நாடுகளில் இருந்து உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே ஐ.நா. வெசாக் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுர. மே முதல் வாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வியட்நாமுக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.ஐ.நா. வெசாக் தின நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் வியட்நாமுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐ.நா. வெசாக் தின நிகழ்வுகள் மே 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதிவரை ஹோ சி மின் நகரில் நடைபெறுகின்றது.85 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட 2 ஆயிரத்து 700 விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை, இந்தியா, கம்போடியா, நேபாளம், லாவோஸ் ஆகிய நாடுகளில் இருந்து உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.இலங்கையால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே ஐ.நா. வெசாக் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.