• Sep 20 2024

ஜனாதிபதி தேர்தல்; நாடளாவிய ரீதியில் அமைக்கப்படும் பொலிஸ் சோதனைச் சாவடிகள்..!

Chithra / Jul 29th 2024, 11:16 am
image

Advertisement

 

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடாளவிய ரீதியில் தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸ் சோதனைச் சாவடிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டதும் ஒவ்வொரு பிரிவுக்கும் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளும், அப்பகுதியில் உள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களும்  அவற்றின் செயல்பாட்டை மேற்பார்வை செய்வார்கள்.

பொலிஸ் சோதனைச் சாவடிகளில் தேர்தல் வன்முறை மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை கண்காணிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இதேவேளை தேர்தல் தொடர்பான பொலிஸ் பிரிவு பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 

பொறுப்பு அதிகாரிகளுடன் செயற்படும் இந்தப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளரால் மேற்பார்வை செய்யப்படுகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கடமைகளை மேற்பார்வையிடுவதற்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்   அசங்க கரவிட்ட, மற்றுமொரு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.வி.டி.ஏ.ஜே. அசங்க கரவிட்ட , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார்.

மாவட்டங்களில் ஒருங்கிணைப்புக்காக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியமிக்கப்பட்டுள்ளார்.   

ஜனாதிபதி தேர்தல்; நாடளாவிய ரீதியில் அமைக்கப்படும் பொலிஸ் சோதனைச் சாவடிகள்.  ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடாளவிய ரீதியில் தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸ் சோதனைச் சாவடிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டதும் ஒவ்வொரு பிரிவுக்கும் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளும், அப்பகுதியில் உள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களும்  அவற்றின் செயல்பாட்டை மேற்பார்வை செய்வார்கள்.பொலிஸ் சோதனைச் சாவடிகளில் தேர்தல் வன்முறை மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளை கண்காணிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.இதேவேளை தேர்தல் தொடர்பான பொலிஸ் பிரிவு பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பொறுப்பு அதிகாரிகளுடன் செயற்படும் இந்தப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளரால் மேற்பார்வை செய்யப்படுகிறது.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கடமைகளை மேற்பார்வையிடுவதற்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்   அசங்க கரவிட்ட, மற்றுமொரு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.வி.டி.ஏ.ஜே. அசங்க கரவிட்ட , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார்.மாவட்டங்களில் ஒருங்கிணைப்புக்காக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியமிக்கப்பட்டுள்ளார்.   

Advertisement

Advertisement

Advertisement