• Sep 20 2024

நாளை ஜனாதிபதி தேர்தல்- திடீரென நாட்டை விட்டு வெளியேறிய பஸில்..!

Sharmi / Sep 20th 2024, 11:52 am
image

Advertisement

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இன்று(20) அதிகாலை அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளார்.

இந்தத் தகவலை விமான நிலையத்துக்குப் பொறுப்பான அதிகாரி ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதிகாலை 03.05 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் ஈ.கே. - 649 விமானத்தில் பஸில் ராஜபக்ஷ டுபாய்க்குச் சென்றுள்ளார்.

அவர் அங்கிருந்து அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார்.

இதேவேளை, தேர்தல் காலங்களில் வெளிநாடு செல்வது பஸில் ராஜபக்ஷவின் வழமையான செயற்பாடு என அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.


நாளை ஜனாதிபதி தேர்தல்- திடீரென நாட்டை விட்டு வெளியேறிய பஸில். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இன்று(20) அதிகாலை அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளார்.இந்தத் தகவலை விமான நிலையத்துக்குப் பொறுப்பான அதிகாரி ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.அதிகாலை 03.05 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் ஈ.கே. - 649 விமானத்தில் பஸில் ராஜபக்ஷ டுபாய்க்குச் சென்றுள்ளார்.அவர் அங்கிருந்து அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார்.இதேவேளை, தேர்தல் காலங்களில் வெளிநாடு செல்வது பஸில் ராஜபக்ஷவின் வழமையான செயற்பாடு என அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement