கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
உத்தரவை மீறும் எந்தவொரு அதிகாரியும் அத்தகைய செலவினங்களுக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி அமைச்சரவைக்கு அனுப்பிய குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரசாங்கத்தின் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று காலை, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள கடுமையான உத்தரவு கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.உத்தரவை மீறும் எந்தவொரு அதிகாரியும் அத்தகைய செலவினங்களுக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி அமைச்சரவைக்கு அனுப்பிய குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இதேவேளை, அரசாங்கத்தின் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று காலை, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.நாட்டின் தற்போதைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச ஊழியர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.