• Mar 30 2025

ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையத்தில் சிக்கல்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

Sharmi / Mar 27th 2025, 10:18 am
image

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற வகையில் உணவைக் கையாண்ட உணவக உரிமையாளர்கள் உட்பட ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக ரூபா 70 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு எச்சரிக்கையையும் செய்யப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத் தலைமையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பல உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன் போது பலசரக்குக் கடைகள் ஹோட்டல்கள் துரித உணவுக் கடைகள் ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையம் போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத உரிமையாளர்கள் புதன்கிழமை(26) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்பட்ட போது தலா 25000 , 15000 , 20000 , 10000 ரூபா உள்ளடங்கலாக 70 ஆயிரம் தண்டப்பணம் அறவிடப்படாமல் எச்சரிக்கையும் செய்யப்பட்டது.

மேலும் ஹோட்டல் ஐஸ்கிரீம் உற்பத்தி நிலைய உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் பரிசோதனை செய்யுமாறும் முன்னேற்றம் காணப்படாததை மூட இறுதி உத்தரவு வழங்க நீதிவானால் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




 

ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையத்தில் சிக்கல்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு. மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற வகையில் உணவைக் கையாண்ட உணவக உரிமையாளர்கள் உட்பட ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக ரூபா 70 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு எச்சரிக்கையையும் செய்யப்பட்டது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத் தலைமையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பல உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.இதன் போது பலசரக்குக் கடைகள் ஹோட்டல்கள் துரித உணவுக் கடைகள் ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையம் போன்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத உரிமையாளர்கள் புதன்கிழமை(26) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்பட்ட போது தலா 25000 , 15000 , 20000 , 10000 ரூபா உள்ளடங்கலாக 70 ஆயிரம் தண்டப்பணம் அறவிடப்படாமல் எச்சரிக்கையும் செய்யப்பட்டது.மேலும் ஹோட்டல் ஐஸ்கிரீம் உற்பத்தி நிலைய உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் பரிசோதனை செய்யுமாறும் முன்னேற்றம் காணப்படாததை மூட இறுதி உத்தரவு வழங்க நீதிவானால் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement