• May 19 2024

கருங்காலி மரக் குற்றிகளால் சிக்கல்...! இருவர் கைது...!samugammedia

Sharmi / Feb 2nd 2024, 12:02 pm
image

Advertisement

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகல்ஹின்ன  பகுதியில் லொரி ஒன்றில் கருங்காலி மரக்குற்றிகளை மறைமுகமாக கொண்டு சென்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு சந்தேக நபர்களை இன்று அதிகாலை (02) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரவ்பொத்தானை பரங்கியாவாடி பகுதியில் இருந்து காலி மாவட்டத்திற்கு லொறியில் கருங்காலி மரக்குற்றிகளை ஏற்றி செல்வதாக போக்குவரத்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த வாகனத்தை சோதனையிட்டபோது கோழியின் மல மச்சங்களுக்கு கீழால் மறைத்து கருங்காலி குற்றிகளை கொண்டு சென்றதாகவும் தெரிய வருகின்றது.

மஹாகுபுக்வெவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சாரதியும் 49 வயதுடைய உதவியாளருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் இருவரையும்  நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.



கருங்காலி மரக் குற்றிகளால் சிக்கல். இருவர் கைது.samugammedia ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகல்ஹின்ன  பகுதியில் லொரி ஒன்றில் கருங்காலி மரக்குற்றிகளை மறைமுகமாக கொண்டு சென்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு சந்தேக நபர்களை இன்று அதிகாலை (02) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஹொரவ்பொத்தானை பரங்கியாவாடி பகுதியில் இருந்து காலி மாவட்டத்திற்கு லொறியில் கருங்காலி மரக்குற்றிகளை ஏற்றி செல்வதாக போக்குவரத்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த வாகனத்தை சோதனையிட்டபோது கோழியின் மல மச்சங்களுக்கு கீழால் மறைத்து கருங்காலி குற்றிகளை கொண்டு சென்றதாகவும் தெரிய வருகின்றது.மஹாகுபுக்வெவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சாரதியும் 49 வயதுடைய உதவியாளருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் இருவரையும்  நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement