குடலில் ஏற்பட்ட கிருமி பரவலால் மாதகலைச் சேர்ந்த 28 வயதான இளம் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தாய்க்கு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 31ஆம் திகதி குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.
அதேவேளை குறித்த தாயாரின் உடல் நிலையும் தொடர்ச்சியாக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது.
இந் நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் குடலில் ஏற்பட்ட கிருமித் தொற்றுக் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.