• May 04 2024

மின் கட்டணத்தை குறைப்பதற்கு யோசனை - ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் மட்டுமே கட்டணத் திருத்தம்!

Chithra / Jan 26th 2024, 9:06 am
image

Advertisement

 

கடந்த ஒக்டோபர் மாதம் தவறான முன்னறிவிப்புகளின் அடிப்படையில் மின்சார சபை கட்டணங்களை திருத்தியமைத்துள்ளதாக பாராளுமன்றத்தின் எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மின்சார சபைக்கு கணிசமான இலாபம் கிடைத்துள்ளது.

இம்மாதம் மின் கட்டணத்தை குறைப்பதற்கான யோசனைகள் அடங்கிய அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இதனைக் குறித்த குழு தெரிவித்திருந்தது.

இந்தக் கட்டணத் திருத்தம் மீளப் பெறப்பட வேண்டும் அல்லது மறுபரிசீலனை செய்து உரிய முறையில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும், இந்தக் கட்டணத் திருத்தத்தால் தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் இழப்பைத் தவிர்க்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் மட்டுமே மின் கட்டணத் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.


மின் கட்டணத்தை குறைப்பதற்கு யோசனை - ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் மட்டுமே கட்டணத் திருத்தம்  கடந்த ஒக்டோபர் மாதம் தவறான முன்னறிவிப்புகளின் அடிப்படையில் மின்சார சபை கட்டணங்களை திருத்தியமைத்துள்ளதாக பாராளுமன்றத்தின் எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவித்துள்ளது.இதன் மூலம் மின்சார சபைக்கு கணிசமான இலாபம் கிடைத்துள்ளது.இம்மாதம் மின் கட்டணத்தை குறைப்பதற்கான யோசனைகள் அடங்கிய அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இதனைக் குறித்த குழு தெரிவித்திருந்தது.இந்தக் கட்டணத் திருத்தம் மீளப் பெறப்பட வேண்டும் அல்லது மறுபரிசீலனை செய்து உரிய முறையில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.மேலும், இந்தக் கட்டணத் திருத்தத்தால் தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் இழப்பைத் தவிர்க்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் மட்டுமே மின் கட்டணத் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement