• Sep 08 2024

வீதியை புனரமைத்துத் தருமாறி கோரி முற்றுகைப் போராட்டம்

Chithra / Jun 10th 2024, 2:16 pm
image

Advertisement

 

புத்தளம் மணல்குன்றிலிருந்து செம்மாந்தழுவ செல்லும் வீதியை புனரமைத்து தருமாறி கோரி  அப்பிரதேச மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதன்போது மக்கள் வாகனங்களை வீதியில் நிறுத்தி, பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது குறித்த வீதியினூடான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

அத்துடன் குறித்தி வீதியினூடாக குப்பைகளை ஏற்றிச் செல்லும் புத்தளம் நகரசபை உழவு இயந்திரங்களும் வீதியினூடாக செல்லமுடியாமல் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து  சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி   குலதுங்க குறித்த பிரச்சனை தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து தீர்வினைப் பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.

அதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட மக்கள் அங்கிருந்து  கலைந்து சென்றனர்.


வீதியை புனரமைத்துத் தருமாறி கோரி முற்றுகைப் போராட்டம்  புத்தளம் மணல்குன்றிலிருந்து செம்மாந்தழுவ செல்லும் வீதியை புனரமைத்து தருமாறி கோரி  அப்பிரதேச மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதன்போது மக்கள் வாகனங்களை வீதியில் நிறுத்தி, பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது குறித்த வீதியினூடான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.அத்துடன் குறித்தி வீதியினூடாக குப்பைகளை ஏற்றிச் செல்லும் புத்தளம் நகரசபை உழவு இயந்திரங்களும் வீதியினூடாக செல்லமுடியாமல் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இதனையடுத்து  சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி   குலதுங்க குறித்த பிரச்சனை தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து தீர்வினைப் பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.அதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட மக்கள் அங்கிருந்து  கலைந்து சென்றனர்.

Advertisement

Advertisement

Advertisement