• Feb 12 2025

தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தி போராட்டம்

Thansita / Feb 11th 2025, 10:01 pm
image

தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கைப்படுத்தியுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு கவனயீர்ப்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை 11.02.2025 பி.ப 4.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. 

இப்போராட்டம் நாளை பௌர்ணமி தினமாகிய 12.02.2025 புதன்கிழமை மாலை 6.00 மணி வரை தொடரும்.

இப்போராட்டத்திற்கு பல கட்சிகளும் பேதங்களின்றி ஆதரவு வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். 

எனவே அனைத்து தமிழ் மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சார்ந்தவர்களை இப்போராட்த்திற்கு கட்சி பேதங்களின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தையிட்டி மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள். அனைவரையும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தி போராட்டம் தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சட்டவிரோதமாகக் கைப்படுத்தியுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு கவனயீர்ப்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை 11.02.2025 பி.ப 4.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இப்போராட்டம் நாளை பௌர்ணமி தினமாகிய 12.02.2025 புதன்கிழமை மாலை 6.00 மணி வரை தொடரும்.இப்போராட்டத்திற்கு பல கட்சிகளும் பேதங்களின்றி ஆதரவு வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். எனவே அனைத்து தமிழ் மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சார்ந்தவர்களை இப்போராட்த்திற்கு கட்சி பேதங்களின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தையிட்டி மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள். அனைவரையும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Advertisement

Advertisement

Advertisement