• Sep 19 2024

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தை புறக்கணித்த அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள்

Chithra / May 15th 2024, 11:29 am
image

Advertisement

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் பகிஸ்கரித்து கலந்து கொள்ளவில்லை.

குறித்த கூட்டம் இன்று காலை 9 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.

குறித்த கூட்டத்தில் விவசாயம், கல்வி, சுகாதாரம், காணி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு வருகிறது.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், அங்கயன் இராமநாதன், மாவட்ட அரசாங்க அதிபர், நிணைக்கள பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தை புறக்கணித்த அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் பகிஸ்கரித்து கலந்து கொள்ளவில்லை.குறித்த கூட்டம் இன்று காலை 9 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.குறித்த கூட்டத்தில் விவசாயம், கல்வி, சுகாதாரம், காணி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு வருகிறது.இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், அங்கயன் இராமநாதன், மாவட்ட அரசாங்க அதிபர், நிணைக்கள பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement