நாட்டில் கறவை மாடுகளை திருடுகின்ற நபர்களின் ஒளிப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது நாட்டில் மாடுகளை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளால் முறைப்பாடுகள் முன்வைக்கப்டுகின்ற நிலையில் அமைச்சர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளொன்றுக்கு சுமார் 20 லீற்றர் பால் கறக்கும் பசுக்கள் திருடப்படுவதாகவும், வாரத்திற்கு ஒரு மாவட்டத்தில் இருந்து சுமார் 35 மாடுகள் திருடப்படுவதாகவும் விவசாய அமைச்சுக்கு கிடைத்த முறைப்பாடுகள் மூலம் தெரியவந்துள்ளது.
எனவே கைது செய்யப்பட்ட பசு திருடர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
திருடர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுங்கள்.பொலிசாருக்கு அமைச்சர் உத்தரவு.samugammedia நாட்டில் கறவை மாடுகளை திருடுகின்ற நபர்களின் ஒளிப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தற்போது நாட்டில் மாடுகளை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளால் முறைப்பாடுகள் முன்வைக்கப்டுகின்ற நிலையில் அமைச்சர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாளொன்றுக்கு சுமார் 20 லீற்றர் பால் கறக்கும் பசுக்கள் திருடப்படுவதாகவும், வாரத்திற்கு ஒரு மாவட்டத்தில் இருந்து சுமார் 35 மாடுகள் திருடப்படுவதாகவும் விவசாய அமைச்சுக்கு கிடைத்த முறைப்பாடுகள் மூலம் தெரியவந்துள்ளது.எனவே கைது செய்யப்பட்ட பசு திருடர்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.