• Sep 20 2024

புஸ்ஸல்லாவ பாடசாலையில் இரசாயன கசிவு- மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Sharmi / Dec 21st 2022, 12:20 pm
image

Advertisement

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்விப் பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்று 21.12.2022 காலை பாடசாலையின் பரிசோதனை கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த வேளையில் புரோமின்  (Bromin)  என்ற இரசாயன குவளை உடைந்ததன் காரணமாக இரசாயனம் ஆய்வுக்கூடம் முழுவதும் இரசாயனம் பரவியுள்ளது.

இதனால் அங்கிருந்த ஐந்து மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மூச்சுத் திணறல் காரணமாக புஸ்ஸல்லாவ வகுக்கப்பட்டிய  வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிலைமையினை கட்டுப்பாட்டு கொண்டு வரும் நோக்கில் கண்டி தீயணைக்கும் பிரிவினர் பாடசாலைக்கு விரைந்துள்ள அதே நேரம் இரசாயனத்தை அப்புறப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஏனைய மாணவர்களை பாடசாலை நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தியுள்ள அதே நேரம் அவர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பில் விரைந்து செயல்பட்ட பாடசாலை அதிபர் கம்பளை கல்வி வலயத்திற்கும் மாகாண கல்வி பணிமணைக்கும் புஸ்ஸலாவ காவல்துறையினருக்கும் அறிவித்ததன் பயனாக மேலதிக விசாரணைகளை புஸ்ஸலாவ காவல்துறையினர் கம்பளை பொலிஸ் அத்தியட்கருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


புஸ்ஸல்லாவ பாடசாலையில் இரசாயன கசிவு- மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்விப் பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்று 21.12.2022 காலை பாடசாலையின் பரிசோதனை கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த வேளையில் புரோமின்  (Bromin)  என்ற இரசாயன குவளை உடைந்ததன் காரணமாக இரசாயனம் ஆய்வுக்கூடம் முழுவதும் இரசாயனம் பரவியுள்ளது.இதனால் அங்கிருந்த ஐந்து மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மூச்சுத் திணறல் காரணமாக புஸ்ஸல்லாவ வகுக்கப்பட்டிய  வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.நிலைமையினை கட்டுப்பாட்டு கொண்டு வரும் நோக்கில் கண்டி தீயணைக்கும் பிரிவினர் பாடசாலைக்கு விரைந்துள்ள அதே நேரம் இரசாயனத்தை அப்புறப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.ஏனைய மாணவர்களை பாடசாலை நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தியுள்ள அதே நேரம் அவர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்இந்த சம்பவம் தொடர்பில் விரைந்து செயல்பட்ட பாடசாலை அதிபர் கம்பளை கல்வி வலயத்திற்கும் மாகாண கல்வி பணிமணைக்கும் புஸ்ஸலாவ காவல்துறையினருக்கும் அறிவித்ததன் பயனாக மேலதிக விசாரணைகளை புஸ்ஸலாவ காவல்துறையினர் கம்பளை பொலிஸ் அத்தியட்கருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement