• Sep 17 2024

சஜித் ஜனாதிபதியானதும் மதுபான அனுமதிப் பத்திரங்கள் கட் - இராதாகிருஸ்ணன் உறுதி

Sharmi / Aug 17th 2024, 2:16 pm
image

Advertisement

சஜித் பிரேமதாச நாற்பதாண்டுகளின் பின்னர் இந்த நாட்டின் அனைத்து இனங்களையும் ஒன்றிணைக்கும் ஜனாதிபதியாக வருவார் என பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் இனவாதத்தையும் சாதியவாதத்தையும் விதைத்து முன்னாள் ஜனாதிபதிகள் ஆட்சியில் இருந்ததாகவும், 40 வருடங்களின் பின்னர் சஜித் பிரேமதாசவே இந்த நாட்டில் அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லும் ஒரேயொரு ஜனாதிபதி வேட்பாளர் எனவும் தெரிவித்தார்.

இன்று ரணிலுக்கு ஆதரவாக இணைவோருக்கு மதுபான விற்பனை உரிமம் மற்றும் பணம் வழங்கப்படுவதாக ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

அத்துடன், ஒரு மதுபான அனுமதிப்பத்திரத்தின் பெறுமதி சுமார் ஐந்து கோடி ரூபா எனவும், ஜனாதிபதியைச் சுற்றி திரண்டுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு  உள்ளாகியுள்ளனர்.

சஜித் பிரேமதாச இந்த நாட்டில் 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், தற்போதைய ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து வழங்கப்பட்ட அனைத்து மதுபான அனுமதிப் பத்திரங்களையும் ரத்து செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவைச் சுற்றி திரண்டிருக்கும் மக்கள் இந்த நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் பணிக்காக ஒன்றுபட்டுள்ளதாகவும், அந்தக் குழுவினருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லை எனவும் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.


சஜித் ஜனாதிபதியானதும் மதுபான அனுமதிப் பத்திரங்கள் கட் - இராதாகிருஸ்ணன் உறுதி சஜித் பிரேமதாச நாற்பதாண்டுகளின் பின்னர் இந்த நாட்டின் அனைத்து இனங்களையும் ஒன்றிணைக்கும் ஜனாதிபதியாக வருவார் என பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் இனவாதத்தையும் சாதியவாதத்தையும் விதைத்து முன்னாள் ஜனாதிபதிகள் ஆட்சியில் இருந்ததாகவும், 40 வருடங்களின் பின்னர் சஜித் பிரேமதாசவே இந்த நாட்டில் அனைத்து இனங்களையும் ஒன்றிணைத்து நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லும் ஒரேயொரு ஜனாதிபதி வேட்பாளர் எனவும் தெரிவித்தார்.இன்று ரணிலுக்கு ஆதரவாக இணைவோருக்கு மதுபான விற்பனை உரிமம் மற்றும் பணம் வழங்கப்படுவதாக ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.அத்துடன், ஒரு மதுபான அனுமதிப்பத்திரத்தின் பெறுமதி சுமார் ஐந்து கோடி ரூபா எனவும், ஜனாதிபதியைச் சுற்றி திரண்டுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு  உள்ளாகியுள்ளனர்.சஜித் பிரேமதாச இந்த நாட்டில் 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், தற்போதைய ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து வழங்கப்பட்ட அனைத்து மதுபான அனுமதிப் பத்திரங்களையும் ரத்து செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.சஜித் பிரேமதாசவைச் சுற்றி திரண்டிருக்கும் மக்கள் இந்த நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் பணிக்காக ஒன்றுபட்டுள்ளதாகவும், அந்தக் குழுவினருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லை எனவும் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement