• Mar 13 2025

தேசிய வைத்தியசாலையில் பழுதடைந்த கதிர்வீச்சு இயந்திரங்கள்! நோயாளிகள் அவதி

Chithra / Mar 13th 2025, 9:13 am
image

 

மஹரகம அபேக்ஷ வைத்தியசாலையில் புற்று நோயாளர்களுக்கான கதிர்வீச்சு சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட 05 இயந்திரங்களில் மூன்று பழுதடைந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாளாந்தம் சுமார் 250 நோயாளர்களின் கதிர்வீச்சு சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

புற்றுநோயாளர்களுக்கான கதிரியல் சிகிச்சைகளை ஆரம்பித்து அவற்றை இடைநடுவே நிறுத்துவதன் மூலம் நோய் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

இதன்படி, சம்பந்தப்பட்ட விடயங்களை மீளமைக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

தேசிய வைத்தியசாலையில் பழுதடைந்த கதிர்வீச்சு இயந்திரங்கள் நோயாளிகள் அவதி  மஹரகம அபேக்ஷ வைத்தியசாலையில் புற்று நோயாளர்களுக்கான கதிர்வீச்சு சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட 05 இயந்திரங்களில் மூன்று பழுதடைந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக நாளாந்தம் சுமார் 250 நோயாளர்களின் கதிர்வீச்சு சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.புற்றுநோயாளர்களுக்கான கதிரியல் சிகிச்சைகளை ஆரம்பித்து அவற்றை இடைநடுவே நிறுத்துவதன் மூலம் நோய் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.இதன்படி, சம்பந்தப்பட்ட விடயங்களை மீளமைக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement