• Jun 17 2025

48 மணிநேர வேலைநிறுத்தத்தில் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள்

Chithra / Jun 17th 2025, 12:12 pm
image

 

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் தொழில்முறை உரிமைகள் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான பல பிரச்சினைகள் காரணமாக இந்த வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன்,  பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு போன்றவற்றை சமாளிப்பதற்கு சம்பள உயர்வை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் கோருகின்றனர்.

இந்நிலையில், பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கம், தொடருந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


48 மணிநேர வேலைநிறுத்தத்தில் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள்  ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் தொழில்முறை உரிமைகள் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான பல பிரச்சினைகள் காரணமாக இந்த வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அத்துடன்,  பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு போன்றவற்றை சமாளிப்பதற்கு சம்பள உயர்வை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் கோருகின்றனர்.இந்நிலையில், பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசாங்கம், தொடருந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement