• Sep 18 2024

ஐக்கிய மக்கள் சக்தியைத் தோற்கடிக்க ரணில் - அநுர கும்பல் இரவு பகல் பாராது சூழ்ச்சி - பரப்புரையில் சஜித் குற்றச்சாட்டு!

Tamil nila / Sep 14th 2024, 11:07 pm
image

Advertisement

"இன்று மக்கள் தெளிவான முறையில் தீர்மானம் எடுக்கும் நிலையில் இருக்கின்றார்கள். நாட்டை அழிவின் பக்கம் இட்டுச்செல்லும் ரணில் - அநுர கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதா? இல்லாவிட்டால் 220 இலட்சம் மக்களையும் ஆட்சிப்பீடமேற்றும் பொதுமக்களின் யுகத்துக்கு மக்கள் வரத்தை வழங்குவதா? என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும்."


- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாஸ தெரிவித்தார்.

"இந்த நாடு மீண்டும் அபிவிருத்தியை நோக்கிய யுகத்துக்குச் செல்வதற்கும் தொழிற்சாலைகள் உருவாகி, தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மக்களின் வறுமை நீங்கி மூலைமுடுக்கு, கிராமங்கள், நகரங்கள், விருத்தியடைந்து நாடு அபிவிருத்தி அடைகின்ற வேலைத்திட்டத்துக்கும் ரணில் - அநுர கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள். ரணில் - அநுர கும்பல் இரவு பகல் பாராது ஐக்கிய மக்கள் சக்தியைத் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்தச் சூழ்ச்சிக்குள் நாட்டு மக்கள் சிக்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்." - என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 52 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று சனிக்கிழமை இரத்தினபுரியில் முன்னெடுக்கப்பட்டது. பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றும்போது எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"கட்டுக்கட்டாக பைல்களைத் தூக்கிச் சென்ற ஒரு குழுவினர் திருடர்களை பிடிப்போம் என்று கூறினாலும், ஐக்கிய சட்டத்தரணிகள் சக்தி உயர்நீதிமன்றத்தை நாடி நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்ஷக்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து தீர்வைப் பெற்று, அவர்கள் நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகள் என வெளிக்கொணர்ந்தது.

எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் இந்தத் தீர்வின் ஊடாக நட்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்போம்." - என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியைத் தோற்கடிக்க ரணில் - அநுர கும்பல் இரவு பகல் பாராது சூழ்ச்சி - பரப்புரையில் சஜித் குற்றச்சாட்டு "இன்று மக்கள் தெளிவான முறையில் தீர்மானம் எடுக்கும் நிலையில் இருக்கின்றார்கள். நாட்டை அழிவின் பக்கம் இட்டுச்செல்லும் ரணில் - அநுர கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதா இல்லாவிட்டால் 220 இலட்சம் மக்களையும் ஆட்சிப்பீடமேற்றும் பொதுமக்களின் யுகத்துக்கு மக்கள் வரத்தை வழங்குவதா என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும்."- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாஸ தெரிவித்தார்."இந்த நாடு மீண்டும் அபிவிருத்தியை நோக்கிய யுகத்துக்குச் செல்வதற்கும் தொழிற்சாலைகள் உருவாகி, தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மக்களின் வறுமை நீங்கி மூலைமுடுக்கு, கிராமங்கள், நகரங்கள், விருத்தியடைந்து நாடு அபிவிருத்தி அடைகின்ற வேலைத்திட்டத்துக்கும் ரணில் - அநுர கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள். ரணில் - அநுர கும்பல் இரவு பகல் பாராது ஐக்கிய மக்கள் சக்தியைத் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்தச் சூழ்ச்சிக்குள் நாட்டு மக்கள் சிக்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்." - என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 52 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று சனிக்கிழமை இரத்தினபுரியில் முன்னெடுக்கப்பட்டது. பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றும்போது எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் உரையாற்றுகையில்,"கட்டுக்கட்டாக பைல்களைத் தூக்கிச் சென்ற ஒரு குழுவினர் திருடர்களை பிடிப்போம் என்று கூறினாலும், ஐக்கிய சட்டத்தரணிகள் சக்தி உயர்நீதிமன்றத்தை நாடி நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்ஷக்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து தீர்வைப் பெற்று, அவர்கள் நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகள் என வெளிக்கொணர்ந்தது.எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் இந்தத் தீர்வின் ஊடாக நட்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்போம்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement