• Sep 21 2024

கற்பிட்டியில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு..!

Sharmi / Sep 20th 2024, 3:51 pm
image

Advertisement

புத்தளம் வெல்லமுந்தலம மற்றும் கொலங்கனத்த ஆகிய கடற்பிரதேசத்தில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை கட்டளையின் வரைவு நடவடிக்கை கடற்படை கப்பல் படைப்பிரிவு  கற்பிட்டி வெல்லமுந்தலம பகுதியில் இருந்து  கொலங்கனத்த வரையிலான கடல் பகுதியில் விஷேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.

இதன்போது, குறித்த கடற்பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் , 5 உரமூடைகளில் அடைக்கப்ப்பட்ட 170 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய நிறுவனக் கப்பல் ரோந்து கடற்படைப் பிரிவின் கடற்படையினர்  மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது காட்டுப் பகுதிக்குள் மிகவும் சூட்சகமான முறையில் 45 உரமூடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1479 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடக்கப்பட்டுள்ளது.

குறித்த பீடி இலைகள் சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக எடுத்து வரப்பட்டு, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் எனவும் கடற்படையினரின் கெடுபிடிகள் காரணமாக சந்தேக நபர்கள் கைவிட்டு சென்றிருக்கலாம் என  சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கடற்படையினரால் மீட்கப்பட்ட 50 உரமூடைகளில் அடைக்கப்பட்ட 1649 கிலோ கிராம் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.


கற்பிட்டியில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு. புத்தளம் வெல்லமுந்தலம மற்றும் கொலங்கனத்த ஆகிய கடற்பிரதேசத்தில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.வடமேற்கு கடற்படை கட்டளையின் வரைவு நடவடிக்கை கடற்படை கப்பல் படைப்பிரிவு  கற்பிட்டி வெல்லமுந்தலம பகுதியில் இருந்து  கொலங்கனத்த வரையிலான கடல் பகுதியில் விஷேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.இதன்போது, குறித்த கடற்பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் , 5 உரமூடைகளில் அடைக்கப்ப்பட்ட 170 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.இதேவேளை, வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய நிறுவனக் கப்பல் ரோந்து கடற்படைப் பிரிவின் கடற்படையினர்  மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது காட்டுப் பகுதிக்குள் மிகவும் சூட்சகமான முறையில் 45 உரமூடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1479 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடக்கப்பட்டுள்ளது.குறித்த பீடி இலைகள் சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக எடுத்து வரப்பட்டு, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் எனவும் கடற்படையினரின் கெடுபிடிகள் காரணமாக சந்தேக நபர்கள் கைவிட்டு சென்றிருக்கலாம் என  சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.இவ்வாறு கடற்படையினரால் மீட்கப்பட்ட 50 உரமூடைகளில் அடைக்கப்பட்ட 1649 கிலோ கிராம் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement