• May 21 2024

யாழில் திடீரென ஒன்றுகூடிய கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள்...!samugammedia

Sharmi / Dec 1st 2023, 4:40 pm
image

Advertisement

இலங்கையில் காணப்படும் கடற்றொழில் மாவட்டங்களை சேர்ந்த கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் கலந்துரையாடல் ஒன்று இன்று(01)  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுடைய அழைப்பை ஏற்று இலங்கையில் இருக்கின்ற கடலோர மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள்,  கிராமிய அமைப்புகளின் தலைவர்கள் இணைந்து யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த  கலந்துரையாடலை நடாத்தினர்.

வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளையும் இணைத்து  ஒன்றுபட்டு எதிர்காலத்தில் ஒற்றுமையாக செயல்படுவதன் நோக்கமாகவே இந்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலுக்கு, யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர், சமூக செயற்பாட்டாளர் செல்வின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




யாழில் திடீரென ஒன்றுகூடிய கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகள்.samugammedia இலங்கையில் காணப்படும் கடற்றொழில் மாவட்டங்களை சேர்ந்த கடற்றொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் கலந்துரையாடல் ஒன்று இன்று(01)  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களுடைய அழைப்பை ஏற்று இலங்கையில் இருக்கின்ற கடலோர மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள்,  கிராமிய அமைப்புகளின் தலைவர்கள் இணைந்து யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இந்த  கலந்துரையாடலை நடாத்தினர்.வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளையும் இணைத்து  ஒன்றுபட்டு எதிர்காலத்தில் ஒற்றுமையாக செயல்படுவதன் நோக்கமாகவே இந்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.குறித்த கலந்துரையாடலுக்கு, யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர், சமூக செயற்பாட்டாளர் செல்வின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement