• May 17 2024

இலங்கையில் சடுதியாக அதிகரித்த அரிசி விலை..! மக்கள் பெரும் சிரமம்

Chithra / Dec 12th 2023, 1:30 pm
image

Advertisement

 

அரிசி வியாபாரிகள் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை 30 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கையின் பிரதான அரிசி நிறுவனம் ஒன்று கிலோ ஒன்றுக்கு 230 ரூபாவாக இருந்த சம்பா அரிசியின் விலையை 260 ரூபாவாக உயர்த்தியுள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை மற்றுமொரு நிறுவனம் 245 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிறுவனங்களுக்கு இஷ்டம்போல் விலையை உயர்த்த வாய்ப்பு அளிக்கப்பட்டால், பண்டிகைக் காலம் முடிவடைவதற்குள் சம்பா அரிசியின் விலை கிலோ ரூ.300க்கு அருகில் இருக்கும் என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் சடுதியாக அதிகரித்த அரிசி விலை. மக்கள் பெரும் சிரமம்  அரிசி வியாபாரிகள் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை 30 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.இலங்கையின் பிரதான அரிசி நிறுவனம் ஒன்று கிலோ ஒன்றுக்கு 230 ரூபாவாக இருந்த சம்பா அரிசியின் விலையை 260 ரூபாவாக உயர்த்தியுள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை மற்றுமொரு நிறுவனம் 245 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.இந்த நிறுவனங்களுக்கு இஷ்டம்போல் விலையை உயர்த்த வாய்ப்பு அளிக்கப்பட்டால், பண்டிகைக் காலம் முடிவடைவதற்குள் சம்பா அரிசியின் விலை கிலோ ரூ.300க்கு அருகில் இருக்கும் என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement