திருகோணமலை, குச்சவெளியில் மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீனவத் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற அப்பாவி சமூகத்தினர் மீது கடற்படை பாதுகாப்புத் தரப்பினர் அத்துமீறி நடப்பதை நாம் வண்மையாகக் கண்டிக்கின்றோம்.
சந்தேக நபர்களாக சந்தேகிக்கப்பட்டால் உரிய முறைப்படி விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இவ்வாறு தான்தோன்றித்தனமான முறையில் அப்பாவிகள் மீது துப்பாகிச்சூடு மேற்கொள்ளும் இச்செயற்பாட்டை நிறுத்த வேண்டும்.
இவ்வாறான செயற்பாட்டால் நாட்டின் பாதுகாப்புத்துறை மேல் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றமைக்கு பெரும் உதாரணமாகி அமைந்து விடும்.
எனவே மீனவ சமூகத்தை அச்சமூட்டும் இச்செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை- ரிசாட் வலியுறுத்து. திருகோணமலை, குச்சவெளியில் மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மீனவத் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற அப்பாவி சமூகத்தினர் மீது கடற்படை பாதுகாப்புத் தரப்பினர் அத்துமீறி நடப்பதை நாம் வண்மையாகக் கண்டிக்கின்றோம். சந்தேக நபர்களாக சந்தேகிக்கப்பட்டால் உரிய முறைப்படி விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இவ்வாறு தான்தோன்றித்தனமான முறையில் அப்பாவிகள் மீது துப்பாகிச்சூடு மேற்கொள்ளும் இச்செயற்பாட்டை நிறுத்த வேண்டும்.இவ்வாறான செயற்பாட்டால் நாட்டின் பாதுகாப்புத்துறை மேல் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றமைக்கு பெரும் உதாரணமாகி அமைந்து விடும். எனவே மீனவ சமூகத்தை அச்சமூட்டும் இச்செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.