• Jun 27 2025

“ரிசானா ஒரு கூண்டுப் பறவை” - சவுதியில் தலைதுண்டிக்கப்பட்ட பெண்ணின் கதை சர்வதேச திரையுலகில் அறிமுகமாகும் இலங்கை இயக்குநர்!

shanuja / Jun 26th 2025, 10:33 pm
image

அரேபியப் பெண் ஒருவரின் கொலையை மையப்படுத்தி “ரிசானா ஒரு கூண்டுப்பறவை” எனும் பெயருடன்  இலங்கையின்  ஈடு இணையற்ற இயக்குனர் சந்திரன் ரட்ணம் சர்வதேச திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். 


கடந்த 2005 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக வேலை செய்த ரிசானா,  ஒரு குழந்தையின் மரணத்திற்கு காரணம்  என்ற குற்றச்சாட்டின் கீழ், அந்நாட்டு அரசாங்கம் அவரின் தலையைத் துண்டித்து கொலை செய்தது. 


அவருக்கு நேர்ந்த  அந்த துயர சம்பவத்தை  மனித உரிமை ஆர்வலர்கள் வெகுவாகக் கண்டித்திருந்தனர். இந்தக் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் தான்  “ரிசானா ஒரு கூண்டுப் பறவை”.  


இந்தத் திரைப்படம் ஒஸ்கார் விருது வென்ற பிரிட்டன் நடிகர் ஜெரெமி அயர்ன்ஸ், பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் கண்டங்களைக் கடந்து உருவாக்கப்பட்டுள்ளது.  


இலங்கையின் திரைப்படத்துறையின், பல தடவைகளை விருது வென்ற தயாரிப்பாளர் சுமதி ஸ்டூடியோவைச் சேர்ந்த ஜகத் சுமதிபாலவுடன் இணைந்து ,17 வயது நிரம்பிய ரிசானா ரஃபீக்கின் கதையை திரையில் வடிக்கத் தயாராகிறார் இயக்குநர் சந்திரன் ரட்ணம்.


உணர்வுபூர்வமான இந்தத் திரைக்காவியத்தின் பெயரை “ரிசானா ஒரு கூண்டுப் பறவை” என்று  திரைப்படக்குழு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



“ரிசானா ஒரு கூண்டுப் பறவை” - சவுதியில் தலைதுண்டிக்கப்பட்ட பெண்ணின் கதை சர்வதேச திரையுலகில் அறிமுகமாகும் இலங்கை இயக்குநர் அரேபியப் பெண் ஒருவரின் கொலையை மையப்படுத்தி “ரிசானா ஒரு கூண்டுப்பறவை” எனும் பெயருடன்  இலங்கையின்  ஈடு இணையற்ற இயக்குனர் சந்திரன் ரட்ணம் சர்வதேச திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக வேலை செய்த ரிசானா,  ஒரு குழந்தையின் மரணத்திற்கு காரணம்  என்ற குற்றச்சாட்டின் கீழ், அந்நாட்டு அரசாங்கம் அவரின் தலையைத் துண்டித்து கொலை செய்தது. அவருக்கு நேர்ந்த  அந்த துயர சம்பவத்தை  மனித உரிமை ஆர்வலர்கள் வெகுவாகக் கண்டித்திருந்தனர். இந்தக் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் தான்  “ரிசானா ஒரு கூண்டுப் பறவை”.  இந்தத் திரைப்படம் ஒஸ்கார் விருது வென்ற பிரிட்டன் நடிகர் ஜெரெமி அயர்ன்ஸ், பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் கண்டங்களைக் கடந்து உருவாக்கப்பட்டுள்ளது.  இலங்கையின் திரைப்படத்துறையின், பல தடவைகளை விருது வென்ற தயாரிப்பாளர் சுமதி ஸ்டூடியோவைச் சேர்ந்த ஜகத் சுமதிபாலவுடன் இணைந்து ,17 வயது நிரம்பிய ரிசானா ரஃபீக்கின் கதையை திரையில் வடிக்கத் தயாராகிறார் இயக்குநர் சந்திரன் ரட்ணம்.உணர்வுபூர்வமான இந்தத் திரைக்காவியத்தின் பெயரை “ரிசானா ஒரு கூண்டுப் பறவை” என்று  திரைப்படக்குழு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement