தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு “வீதி பாதுகாப்பு தினம்” எனும் கருப்பொருளின் கீழ் விசேட விழிப்புணர்வு ஒன்று நேற்று (7) முன்னெடுக்கப்பட்டது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் சாய்ந்தமருது பொலிஸ் திணைக்களமும் இணைந்து சாய்ந்தமருது பிரதேசத்தில் குறித்த விழிப்புணர்வை முன்னெடுத்தனர்.
இந்த நிகழ்வில்,சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் சாய்ந்தமருது பொலீஸ் நிலைய உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போது சுகாதார உத்தியோகத்தர்களும் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து, அதிவேகமாக செலுத்தப்பட்ட வாகனங்கள்,வீதிப்போக்குவரத்து சட்டங்களை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள், தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள்,வாகன ஓட்டும் போது கைபேசியைப் பயன்படுத்திய ஓட்டுநர்கள்
என்பவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வும் ஆலோசனைகளும் வழங்கினர்.
வீதிப் பாதுகாப்பு தின விசேட விழிப்புணர்வு தேசிய காயங்கள் தடுப்பு வாரத்தினை முன்னிட்டு “வீதி பாதுகாப்பு தினம்” எனும் கருப்பொருளின் கீழ் விசேட விழிப்புணர்வு ஒன்று நேற்று (7) முன்னெடுக்கப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் சாய்ந்தமருது பொலிஸ் திணைக்களமும் இணைந்து சாய்ந்தமருது பிரதேசத்தில் குறித்த விழிப்புணர்வை முன்னெடுத்தனர்.இந்த நிகழ்வில்,சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கு களத்தடுப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் சாய்ந்தமருது பொலீஸ் நிலைய உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.இதன்போது சுகாதார உத்தியோகத்தர்களும் பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து, அதிவேகமாக செலுத்தப்பட்ட வாகனங்கள்,வீதிப்போக்குவரத்து சட்டங்களை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள், தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள்,வாகன ஓட்டும் போது கைபேசியைப் பயன்படுத்திய ஓட்டுநர்கள்என்பவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வும் ஆலோசனைகளும் வழங்கினர்.