• Sep 29 2024

யாழ்.காவலூர் கோவிலில் களவு...! பல இலட்சம் பெறுமதியான நகைகள் மாயம்...! நிர்வாகத்தினர் அதிர்ச்சி...!

Sharmi / Jun 26th 2024, 12:13 pm
image

Advertisement

யாழ். ஊர்காவற்றுறை புளியங்கூடல் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஆலயமொன்றில் வைக்கப்பட்டிருந்த 64 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போலித் திறப்பொன்றைப் பயன்படுத்தி இந்த நகைகள் திருடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. 

அதேவேளை, அங்கிருந்த நகைகளைத் தவிர 8 இலட்சம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளது.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை, யாழ் குடாநாட்டில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளிலும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில்,  இது தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


யாழ்.காவலூர் கோவிலில் களவு. பல இலட்சம் பெறுமதியான நகைகள் மாயம். நிர்வாகத்தினர் அதிர்ச்சி. யாழ். ஊர்காவற்றுறை புளியங்கூடல் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஆலயமொன்றில் வைக்கப்பட்டிருந்த 64 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.போலித் திறப்பொன்றைப் பயன்படுத்தி இந்த நகைகள் திருடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அதேவேளை, அங்கிருந்த நகைகளைத் தவிர 8 இலட்சம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளது.குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.அதேவேளை, யாழ் குடாநாட்டில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளிலும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில்,  இது தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement