• Sep 08 2024

யாழில் பாடசாலை மாணவர்களை மணிக்கணக்காக காக்க வைத்த சஜித்...!

Sharmi / Jun 12th 2024, 4:48 pm
image

Advertisement

யாழில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்கும் பாடசாலை நிகழ்வொன்றில் நீண்ட நேரமாக சஜித்தின் வருகைக்காக மாணவர்கள் காத்திருந்த சம்பவம்  விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச யாழிற்கு விஜயம் செய்துள்ள நிலையில்  பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், இன்றையதினம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து கையளிக்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வு பிற்பகல்  2 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரை வரவேற்பதற்காக பாடசாலை மாணவர்கள் இரண்டு மணிக்கு முன்பதாகவே தயார் நிலையில் இருந்தனர்.

எனினும் குறித்த நேரத்தில் சஜித் பிரேமதாச அங்கு சமூகமளிக்காது  சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு பின்னரே தாமதமாக குறித்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்.

இதனால் சஜித்தின் வருகைக்காக மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சோர்வடைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

யாழில் பாடசாலை மாணவர்களை மணிக்கணக்காக காக்க வைத்த சஜித். யாழில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்கும் பாடசாலை நிகழ்வொன்றில் நீண்ட நேரமாக சஜித்தின் வருகைக்காக மாணவர்கள் காத்திருந்த சம்பவம்  விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச யாழிற்கு விஜயம் செய்துள்ள நிலையில்  பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டுள்ளார்.இந்நிலையில், இன்றையதினம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து கையளிக்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.குறித்த நிகழ்வு பிற்பகல்  2 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரை வரவேற்பதற்காக பாடசாலை மாணவர்கள் இரண்டு மணிக்கு முன்பதாகவே தயார் நிலையில் இருந்தனர்.எனினும் குறித்த நேரத்தில் சஜித் பிரேமதாச அங்கு சமூகமளிக்காது  சுமார் ஒன்றரை மணிநேரத்துக்கு பின்னரே தாமதமாக குறித்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்.இதனால் சஜித்தின் வருகைக்காக மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சோர்வடைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement