• Sep 20 2024

சஜித் பிரேமதாசா காலையிலும் மாலையிலும் ரணிலின் படத்தை வணங்க வேண்டும் - விஜயகலா தெரிவிப்பு

Anaath / Aug 28th 2024, 2:39 pm
image

Advertisement

காலையிலும் மாலையிலும் ரணிலின் படத்தை வைத்து சஜித் வணங்க வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழில் நேற்று( 27) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இடம்பெற்ற உரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்த நாடு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த அரசாங்கம் என்று நாங்கள் சொல்லும் போது 2009 ஆம் ஆண்டு  யுத்தத்தை முடியுவுக்கு கொண்டு வந்த அரசாங்கம் 2010 இலே  ஆட்சியை கைப்பற்றி இந்த மக்களை மீள் குடியேற்றம் செய்திருக்கலாம். அவர்களினுடைய சொந்த இடத்துக்கு அவர்களை கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் எவற்றையும் அவர்கள் அந்த காலங்களில் அவர்கள் செய்யவில்லை. அவர்கள் இனவாதம், மதவாதம், மொழிவாதங்களை பயன்படுத்தி நாட்டை தங்களுடைய வசம் வைத்திருந்திருக்கிறார்கள்.  இனவாதம் என்ற போர்வையில் பலவிதமான இனவாதிகள் கடந்த கால அரசங்கத்தோடு பயணித்திருக்கின்றார்கள். 


உங்களுக்கு தெரியும் எத்தனையோ விதமாக சின்னாபின்னமாக உடைக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்த பயங்கரவாதிகளின் பெயர்களை நாங்கள் பார்த்தால் மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, கம்பன்பில, பாட்டலி சம்பிக்க ரணவக்க இப்படியான இனவாதிகள் அங்கே  இருக்கின்றார்கள். அவர்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் மக்களுக்கோ, தமிழ் பேசுகின்ற வடக்கு கிழக்கு மக்களுக்கோ ஒரு காலமும் தீர்வோ அல்லது அபிவிருத்தியோ அல்லது பாதுகாப்பகவோ வாழுகின்ற சந்தர்ப்பம் ஏற்பட மாட்டாது.

கடந்த காலத்தில் இவர்கள் அரசங்கத்தோடு ஆட்சியில் இருந்த காலத்தில் தான். வடக்கு கிழக்கில் வருகின்ற தலைவர்கள் எண்ணத்தை செய்ய முற்படுகின்றார்களோ அந்த காலத்தில் அவர்கள் அதற்கு எதிராக செயற்பட்டிருக்கின்றார்கள். 

நீங்கள் சிந்தித்து பாருங்கள், ஒவ்வொரு வேட்பாளரோடு பல அணிகள் சேர்ந்திருக்கின்றன. உதாரணமாக  ரணில் விக்கிரமசிங்கவோடு பார்க்கும் பொழுது பல காட்சிகளில் இருந்தவர்கள் உடைந்து பிரிந்து இந்த கட்சியிலே இணைந்து  இவ்வளவு காலம் இந்தநாட்டையும்,  நாட்டு மக்களையும் தங்களையும் ஏமாற்றியதை உணர்ந்து தற்பொழுது ஒன்றிணைந்து தற்பொழுது இவர் தான் இந்த நாட்டுக்குரிய தலைவர். இவாராலே  தான் இயலும் என்பதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். 

கடந்த காலங்களாக நான் நினைக்கின்றேன் நானே கிட்டத்தட்ட பத்து வருடங்கள் பாராளுமன்றத்தில்   இருந்திருக்கின்றேன். பாராளுமன்றத்திற்கு வெளியிலே கிட்டத்தட்ட தற்பொழுது நான்கு வருடங்கள் இருந்திருக்கின்றேன். இதற்கு முன்னர் எனது கணவர் மகேஸ்வரன் 1999 ஆம் ஆண்டு தொடக்கம் பயணித்திருக்கின்றார். கிட்டத்தட்ட 25 வருடகாலமாக நாங்கள் இந்த ஐக்கிய தேசிய கட்சியினூடாக தான் பயணிக்கின்றோம். அந்த வேளையிலிருந்து நான் பார்த்திருக்கின்றேன். இவர்கள் பல கட்சிகளிலுமிருந்து பலவிதமான இனவாதங்களை தூண்டியுள்ளார்கள். . உண்மையிலே பாதிக்கப்படுவது பெரும்பான்மை  இன  மக்கள் இல்லை. தமிழ் பேசுகின்ற தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

தற்போது எங்களுடைய வேட்பாளராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவோடு இணைந்திருக்கின்ற அரசியல் வாதிகளும் மாற்று கட்சியிலே போட்டியிடுகின்ற வேட்பாளர்கள்  இருக்கின்றார்கள். அனுர குமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாச என்ற நபர்கள் போட்டியிடுகின்றார்கள் . அவர்களோடு போட்டியிடும் போது உங்களுக்கு தெரியும். அனுர குமார திஸாநாயக்கவை எடுத்து பார்த்தால் அவரை  நாட்டு மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். கடந்த காலங்களிலே நாட்டு மக்களுக்கு எதிராக செயற்பட்டவர். அவரை நம்பி வாழ முடியாது என்று  பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தெரியும். ஆனால் உங்களுக்கு தெரியும் வடக்கு கிழக்கிலே நாங்களும் வாழ்ந்திருக்கின்றோம். எங்களை ஆண்ட தலைவர்களிடையே இனங்கள் பாதுகாப்பாக வாழ்த்துக்கொண்டிருக்கின்றோம். 

நாங்கள் வடக்கு கிழக்கிலே வாழ்த்து கொண்டிருந்தாலும் உணவு பிரச்சினை, பொருட்கள் பிரச்சினை, இவர்கள் பாதைகளை பூட்டினாலும் எங்களை பதுகாப்பாக எங்களுடைய தலைவர்கள் ஆண்டு கொண்டார்கள்.

அதே போல உங்களுக்கு தெரியும் சஜித் பிரேமதாச இன்று போட்டியிடுகின்றார். அவரை கடந்த காலத்தில் இந்த ஜனாதிபதி தேர்தலில் இந்த மாகாணத்தில், இந்த மாவட்டத்தில் எங்களுடையம்கட்சி நியமித்ததால் அவரை கடந்த காலத்தில் எங்களுடைய பிரச்சார கூட்டத்துக்கு அழைத்து சென்றிருக்கிறோம். ஆனால் இன்று பாருங்கள் அவருடன்  சேர்ந்திருக்கின்ற கூட்டு காட்சிகளை பார்க்கும் போது உதாரணமாக பாட்டாளி சம்பிக்க ரணவக்க இருக்கின்றார் . அவர் இருக்கின்ற போது இந்த தமிழ் மக்களுக்கு தீர்வினை வளங்க மாட்டார். அவர் தமிழ், முஸ்லீம் மக்களுக்கு எதிரான ஒரு அரசியல் தலைவர். 

இப்படியான அரசியல் வாதிகளை உங்களுடைய காட்சிகளில் இணைத்துக்கொண்டு தமிழ் பேசுகின்ற மக்களுக்கு எப்படி நீங்கள் தீர்வுகளை வழங்குவீர்கள் என அவர் கேட்டுள்ளார்.

மேலும் அவர், தமிழ் மக்களுக்கு நான் கூறுவது இனவாதி அரசியல் தலைவர்களை நாங்கள் ஆதரிப்பதனூடாக இன்னும் 40 வருடங்கள் பின்னுக்கு தான் செல்லவுள்ளோம். 

கடந்த அறக்கலை நே ரமான 2024 ஆம் ஆண்டு மே மாதத்திலே அந்த 60 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி தலைவர்காக இருந்திருக்கின்ற சஜித் பிரேமதாசா அவர்களை  எதிர்க்கட்சி தலைவராக கொண்டுவந்ததே எங்களுடைய ரணில் விக்கிரமசிங்க தான். அவர்  காலையும் மாலையும் எழும்புகிற நேரமும் படுக்கிற நேரமும் ரணில் விக்கிரமசிங்காவினுடைய படத்தை தான் வணங்க வேண்டும். அவருக்கு அரசியலை படிப்பித்ததே ரணில் விக்கிரமசிங்க தான். இன்று தகப்பனும் மகனும் தலைவரும், உறுப்பினருமான போட்டியிடுகிறார்கள். தகப்பனும் மகனும் ஒரு கட்சியில் ஒரு வீட்டுக்கு போட்டியிடுகின்ற மாதிரி தான் இவர்கள் போட்டியிடுகின்றார். இவா எப்படிடி தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க போகின்றார்? என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசா காலையிலும் மாலையிலும் ரணிலின் படத்தை வணங்க வேண்டும் - விஜயகலா தெரிவிப்பு காலையிலும் மாலையிலும் ரணிலின் படத்தை வைத்து சஜித் வணங்க வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று( 27) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இடம்பெற்ற உரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாடு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த அரசாங்கம் என்று நாங்கள் சொல்லும் போது 2009 ஆம் ஆண்டு  யுத்தத்தை முடியுவுக்கு கொண்டு வந்த அரசாங்கம் 2010 இலே  ஆட்சியை கைப்பற்றி இந்த மக்களை மீள் குடியேற்றம் செய்திருக்கலாம். அவர்களினுடைய சொந்த இடத்துக்கு அவர்களை கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் எவற்றையும் அவர்கள் அந்த காலங்களில் அவர்கள் செய்யவில்லை. அவர்கள் இனவாதம், மதவாதம், மொழிவாதங்களை பயன்படுத்தி நாட்டை தங்களுடைய வசம் வைத்திருந்திருக்கிறார்கள்.  இனவாதம் என்ற போர்வையில் பலவிதமான இனவாதிகள் கடந்த கால அரசங்கத்தோடு பயணித்திருக்கின்றார்கள். உங்களுக்கு தெரியும் எத்தனையோ விதமாக சின்னாபின்னமாக உடைக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்த பயங்கரவாதிகளின் பெயர்களை நாங்கள் பார்த்தால் மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, கம்பன்பில, பாட்டலி சம்பிக்க ரணவக்க இப்படியான இனவாதிகள் அங்கே  இருக்கின்றார்கள். அவர்கள் இருக்கும் வரைக்கும் தமிழ் மக்களுக்கோ, தமிழ் பேசுகின்ற வடக்கு கிழக்கு மக்களுக்கோ ஒரு காலமும் தீர்வோ அல்லது அபிவிருத்தியோ அல்லது பாதுகாப்பகவோ வாழுகின்ற சந்தர்ப்பம் ஏற்பட மாட்டாது.கடந்த காலத்தில் இவர்கள் அரசங்கத்தோடு ஆட்சியில் இருந்த காலத்தில் தான். வடக்கு கிழக்கில் வருகின்ற தலைவர்கள் எண்ணத்தை செய்ய முற்படுகின்றார்களோ அந்த காலத்தில் அவர்கள் அதற்கு எதிராக செயற்பட்டிருக்கின்றார்கள். நீங்கள் சிந்தித்து பாருங்கள், ஒவ்வொரு வேட்பாளரோடு பல அணிகள் சேர்ந்திருக்கின்றன. உதாரணமாக  ரணில் விக்கிரமசிங்கவோடு பார்க்கும் பொழுது பல காட்சிகளில் இருந்தவர்கள் உடைந்து பிரிந்து இந்த கட்சியிலே இணைந்து  இவ்வளவு காலம் இந்தநாட்டையும்,  நாட்டு மக்களையும் தங்களையும் ஏமாற்றியதை உணர்ந்து தற்பொழுது ஒன்றிணைந்து தற்பொழுது இவர் தான் இந்த நாட்டுக்குரிய தலைவர். இவாராலே  தான் இயலும் என்பதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். கடந்த காலங்களாக நான் நினைக்கின்றேன் நானே கிட்டத்தட்ட பத்து வருடங்கள் பாராளுமன்றத்தில்   இருந்திருக்கின்றேன். பாராளுமன்றத்திற்கு வெளியிலே கிட்டத்தட்ட தற்பொழுது நான்கு வருடங்கள் இருந்திருக்கின்றேன். இதற்கு முன்னர் எனது கணவர் மகேஸ்வரன் 1999 ஆம் ஆண்டு தொடக்கம் பயணித்திருக்கின்றார். கிட்டத்தட்ட 25 வருடகாலமாக நாங்கள் இந்த ஐக்கிய தேசிய கட்சியினூடாக தான் பயணிக்கின்றோம். அந்த வேளையிலிருந்து நான் பார்த்திருக்கின்றேன். இவர்கள் பல கட்சிகளிலுமிருந்து பலவிதமான இனவாதங்களை தூண்டியுள்ளார்கள். . உண்மையிலே பாதிக்கப்படுவது பெரும்பான்மை  இன  மக்கள் இல்லை. தமிழ் பேசுகின்ற தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது எங்களுடைய வேட்பாளராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவோடு இணைந்திருக்கின்ற அரசியல் வாதிகளும் மாற்று கட்சியிலே போட்டியிடுகின்ற வேட்பாளர்கள்  இருக்கின்றார்கள். அனுர குமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாச என்ற நபர்கள் போட்டியிடுகின்றார்கள் . அவர்களோடு போட்டியிடும் போது உங்களுக்கு தெரியும். அனுர குமார திஸாநாயக்கவை எடுத்து பார்த்தால் அவரை  நாட்டு மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். கடந்த காலங்களிலே நாட்டு மக்களுக்கு எதிராக செயற்பட்டவர். அவரை நம்பி வாழ முடியாது என்று  பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தெரியும். ஆனால் உங்களுக்கு தெரியும் வடக்கு கிழக்கிலே நாங்களும் வாழ்ந்திருக்கின்றோம். எங்களை ஆண்ட தலைவர்களிடையே இனங்கள் பாதுகாப்பாக வாழ்த்துக்கொண்டிருக்கின்றோம். நாங்கள் வடக்கு கிழக்கிலே வாழ்த்து கொண்டிருந்தாலும் உணவு பிரச்சினை, பொருட்கள் பிரச்சினை, இவர்கள் பாதைகளை பூட்டினாலும் எங்களை பதுகாப்பாக எங்களுடைய தலைவர்கள் ஆண்டு கொண்டார்கள்.அதே போல உங்களுக்கு தெரியும் சஜித் பிரேமதாச இன்று போட்டியிடுகின்றார். அவரை கடந்த காலத்தில் இந்த ஜனாதிபதி தேர்தலில் இந்த மாகாணத்தில், இந்த மாவட்டத்தில் எங்களுடையம்கட்சி நியமித்ததால் அவரை கடந்த காலத்தில் எங்களுடைய பிரச்சார கூட்டத்துக்கு அழைத்து சென்றிருக்கிறோம். ஆனால் இன்று பாருங்கள் அவருடன்  சேர்ந்திருக்கின்ற கூட்டு காட்சிகளை பார்க்கும் போது உதாரணமாக பாட்டாளி சம்பிக்க ரணவக்க இருக்கின்றார் . அவர் இருக்கின்ற போது இந்த தமிழ் மக்களுக்கு தீர்வினை வளங்க மாட்டார். அவர் தமிழ், முஸ்லீம் மக்களுக்கு எதிரான ஒரு அரசியல் தலைவர். இப்படியான அரசியல் வாதிகளை உங்களுடைய காட்சிகளில் இணைத்துக்கொண்டு தமிழ் பேசுகின்ற மக்களுக்கு எப்படி நீங்கள் தீர்வுகளை வழங்குவீர்கள் என அவர் கேட்டுள்ளார்.மேலும் அவர், தமிழ் மக்களுக்கு நான் கூறுவது இனவாதி அரசியல் தலைவர்களை நாங்கள் ஆதரிப்பதனூடாக இன்னும் 40 வருடங்கள் பின்னுக்கு தான் செல்லவுள்ளோம். கடந்த அறக்கலை நே ரமான 2024 ஆம் ஆண்டு மே மாதத்திலே அந்த 60 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி தலைவர்காக இருந்திருக்கின்ற சஜித் பிரேமதாசா அவர்களை  எதிர்க்கட்சி தலைவராக கொண்டுவந்ததே எங்களுடைய ரணில் விக்கிரமசிங்க தான். அவர்  காலையும் மாலையும் எழும்புகிற நேரமும் படுக்கிற நேரமும் ரணில் விக்கிரமசிங்காவினுடைய படத்தை தான் வணங்க வேண்டும். அவருக்கு அரசியலை படிப்பித்ததே ரணில் விக்கிரமசிங்க தான். இன்று தகப்பனும் மகனும் தலைவரும், உறுப்பினருமான போட்டியிடுகிறார்கள். தகப்பனும் மகனும் ஒரு கட்சியில் ஒரு வீட்டுக்கு போட்டியிடுகின்ற மாதிரி தான் இவர்கள் போட்டியிடுகின்றார். இவா எப்படிடி தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க போகின்றார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement