• Mar 10 2025

9 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை; திருமலையில் கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்..!

Sharmi / Mar 7th 2025, 12:24 pm
image

திருகோணமலை புல்மோட்டையில் அமைந்துள்ள இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் அமைய அடிப்படையில் கடமை புரியும் ஊழியர்களுக்கு கடந்த 9 மாதங்களாக கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என தெரிவித்து இன்றையதினம்(07) காலை புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் அமைய அடிப்படையில் கடமையாற்றும் 83 ஊழியர்களுக்கு இவ்வாறு 9 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக உரிய நிர்வாகத்துடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடாத்தியும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லையென தெரிவித்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இக் கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி, தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  


9 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை; திருமலையில் கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம். திருகோணமலை புல்மோட்டையில் அமைந்துள்ள இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் அமைய அடிப்படையில் கடமை புரியும் ஊழியர்களுக்கு கடந்த 9 மாதங்களாக கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என தெரிவித்து இன்றையதினம்(07) காலை புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் அமைய அடிப்படையில் கடமையாற்றும் 83 ஊழியர்களுக்கு இவ்வாறு 9 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.இது தொடர்பாக உரிய நிர்வாகத்துடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடாத்தியும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லையென தெரிவித்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இக் கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி, தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement