• May 19 2024

மருதங்கேணி பிரதேச செயலகத்தில் உள்ளூர் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி...!

Sharmi / Feb 26th 2024, 2:38 pm
image

Advertisement

வடமராட்சி கிழக்கு  பிரதேச செயலகத்தில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் அனுசரணையில் விற்பனை கண்காட்சி இன்று(26)  காலை ஆரம்பமானது.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் ஆரம்பமான குறித்த கண்காட்சி மாலை 05.00 மணிவரை இடம்பெறவுள்ளது.

இக் கண்காட்சியில், வடமராட்சி கிழக்கு பிரதேசங்களில் வசிக்கும் சிறு தொழில்  முயற்சியாளர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி அதிகளவான விற்பனையில் ஈடுபட்டனர்.

உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு அவர்களது உள்ளூர் உற்பத்திகளின் தரத்தை மக்கள் மத்தியில் இலகுவாக கொண்டு சென்று உள்ளூர்  உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் வடமராட்சிகிழக்கு பிரதேச செயலகத்தில் ஒவ்வொரு மாதமும் குறித்த விற்பனை கண்காட்சி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



மருதங்கேணி பிரதேச செயலகத்தில் உள்ளூர் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி. வடமராட்சி கிழக்கு  பிரதேச செயலகத்தில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் அனுசரணையில் விற்பனை கண்காட்சி இன்று(26)  காலை ஆரம்பமானது.வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் ஆரம்பமான குறித்த கண்காட்சி மாலை 05.00 மணிவரை இடம்பெறவுள்ளது.இக் கண்காட்சியில், வடமராட்சி கிழக்கு பிரதேசங்களில் வசிக்கும் சிறு தொழில்  முயற்சியாளர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி அதிகளவான விற்பனையில் ஈடுபட்டனர்.உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு அவர்களது உள்ளூர் உற்பத்திகளின் தரத்தை மக்கள் மத்தியில் இலகுவாக கொண்டு சென்று உள்ளூர்  உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் வடமராட்சிகிழக்கு பிரதேச செயலகத்தில் ஒவ்வொரு மாதமும் குறித்த விற்பனை கண்காட்சி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement