யாழ். சங்கானை பிரதேச செயலகத்தில் பொங்கல் நிகழ்வுகள் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் இன்று(17) முன்னெடுக்கபட்டது.
இதன்பொழுது சம்பிரதாய பூர்வமாக பொங்கல் பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தப்பட்டது.
தொடர்ச்சியாக உத்தியோகத்தர்களிடையே பராம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இதன்பொழுது சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,கிராம அலுவலர்கள், சமுர்த்தி அபிவிருத்திகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.