• Aug 24 2026

மொனராகலையில் 7 கோடி ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு: ஒன்றரை ஏக்கர் தோட்டமும் அழிப்பு!

Chithra / Aug 23rd 2026, 4:57 pm
image


மொனராகலை, ஹம்பேகமுவ – கோமகல வீதியின் மூலையில் உள்ள மௌர கால்வாய் கரைக்கு அருகில் வாலான ஊழல் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், விற்பனைக்காகத் தயார்படுத்தப்பட்டிருந்த பாரிய கஞ்சா பொதியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 1,044 கிலோகிராம் 180 கிராம் எடையுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சந்தைப் பெறுமதி சுமார் 7 கோடியே 37 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, குறித்த பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் இரகசியமாகப் பயிரிடப்பட்டிருந்த கஞ்சாத் தோட்டமொன்றையும் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.


இதன்போது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 54,096 கஞ்சா மரங்கள் அழிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


வாலான ஊழல் ஒழிப்புப் படைப் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


மொனராகலையில் 7 கோடி ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு: ஒன்றரை ஏக்கர் தோட்டமும் அழிப்பு மொனராகலை, ஹம்பேகமுவ – கோமகல வீதியின் மூலையில் உள்ள மௌர கால்வாய் கரைக்கு அருகில் வாலான ஊழல் ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், விற்பனைக்காகத் தயார்படுத்தப்பட்டிருந்த பாரிய கஞ்சா பொதியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 1,044 கிலோகிராம் 180 கிராம் எடையுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சந்தைப் பெறுமதி சுமார் 7 கோடியே 37 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, குறித்த பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் இரகசியமாகப் பயிரிடப்பட்டிருந்த கஞ்சாத் தோட்டமொன்றையும் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.இதன்போது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 54,096 கஞ்சா மரங்கள் அழிக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.வாலான ஊழல் ஒழிப்புப் படைப் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement