• Sep 08 2024

இந்திய தேர்தல் -மோடிக்கும் ஸ்டாலினுக்கும் செல்வம் எம்.பி வாழ்த்து!

Tamil nila / Jun 4th 2024, 8:22 pm
image

Advertisement

நாடளாவிய ரீதியில் மோடியும் ,,தமிழ் நாட்டில் மாண்புமிகு மு க ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் மோடிக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தி பின்வருமாறு,

இந்திய நாட்டின் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி  தலைவர் மாண்புமிகு நரேந்திர மோடிக்கும்   கட்சி நாடு தழுவிய ரீதியில் பெற்ற வெற்றிக்கும்  எமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் 

தங்களின் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்தும் மூன்றாவது  தடவையும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை பெற்று ஆட்சி அமைப்பது தங்கள் மீது மக்கள் கொண்டுள்ள அதீத நம்பிக்கையை பறை சாற்றுகிறது.

தங்களது இந்த வெற்றிக்கு எமது ஈழ மக்கள் சார்பாகவும் நமது கட்சி சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.  தங்கள் அரசியல் பணி தொடர்ந்து சிறக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.  

இதேவேளை மு க ஸ்டாலினுக்கு  தெரிவித்துள்ள வாழ்த்து செய்தி பின்வருமாறு,

 தமிழ் நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடைய அரசியல் இயக்கம் பெற்ற மாபெரும் வெற்றிக்கு எமது உளம் நிறைந்த வாழ்த்துக்கள் என செல்வம் எம்.பி  தெரிவித்துள்ளார்.  

தாங்கள் இந்த மாபெரும் இயக்கத்தின் தலைமையை ஏற்று பயணிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து மாநிலங்கள் அவை தேர்தலிலும் அபரிதமான வெற்றியை ஈட்டியதோடு நாடாளுமன்றத் தேர்தலிலும் வரலாறு காணாத வெற்றியை பெற்றிருப்பது தங்களுடைய ஆளுமையையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறது.

தாங்கள் ஈட்டிய இந்த மாபெரும் வெற்றிக்கு எமது ஈழ மக்கள் சார்பாகவும் எமது கட்சி சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.  

தங்கள் அரசியல் பணி தொடர்ந்து சிறக்கவும் மக்கள் மனதில் இன்று போல் என்றும் இடம்பெற்றிருக்கவும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார். 


 


இந்திய தேர்தல் -மோடிக்கும் ஸ்டாலினுக்கும் செல்வம் எம்.பி வாழ்த்து நாடளாவிய ரீதியில் மோடியும் ,,தமிழ் நாட்டில் மாண்புமிகு மு க ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளனர்.இதில் மோடிக்கு தெரிவித்துள்ள வாழ்த்து செய்தி பின்வருமாறு,இந்திய நாட்டின் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி  தலைவர் மாண்புமிகு நரேந்திர மோடிக்கும்   கட்சி நாடு தழுவிய ரீதியில் பெற்ற வெற்றிக்கும்  எமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் தங்களின் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்தும் மூன்றாவது  தடவையும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை பெற்று ஆட்சி அமைப்பது தங்கள் மீது மக்கள் கொண்டுள்ள அதீத நம்பிக்கையை பறை சாற்றுகிறது.தங்களது இந்த வெற்றிக்கு எமது ஈழ மக்கள் சார்பாகவும் நமது கட்சி சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.  தங்கள் அரசியல் பணி தொடர்ந்து சிறக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.  இதேவேளை மு க ஸ்டாலினுக்கு  தெரிவித்துள்ள வாழ்த்து செய்தி பின்வருமாறு, தமிழ் நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடைய அரசியல் இயக்கம் பெற்ற மாபெரும் வெற்றிக்கு எமது உளம் நிறைந்த வாழ்த்துக்கள் என செல்வம் எம்.பி  தெரிவித்துள்ளார்.  தாங்கள் இந்த மாபெரும் இயக்கத்தின் தலைமையை ஏற்று பயணிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து மாநிலங்கள் அவை தேர்தலிலும் அபரிதமான வெற்றியை ஈட்டியதோடு நாடாளுமன்றத் தேர்தலிலும் வரலாறு காணாத வெற்றியை பெற்றிருப்பது தங்களுடைய ஆளுமையையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறது.தாங்கள் ஈட்டிய இந்த மாபெரும் வெற்றிக்கு எமது ஈழ மக்கள் சார்பாகவும் எமது கட்சி சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.  தங்கள் அரசியல் பணி தொடர்ந்து சிறக்கவும் மக்கள் மனதில் இன்று போல் என்றும் இடம்பெற்றிருக்கவும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement