இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட பல திட்டங்களை மீண்டும் தொடங்கும் வகையில் உலக வங்கி பிரதிநிதிகள் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளனர்.
2022-23 பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட நெடுஞ்சாலைகள், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களை மீண்டும் தொடங்கும் வகையில் இந்த விஜயம் அமைகிறது.
குறித்த திட்டங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லென் ஆகியோர் ஏற்கனவே திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவுடன் இது குறித்து ஆலோசித்துள்ளனர்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா பெப்ரவரி 17 அன்று இலங்கை வருகை தரவுள்ளார்.
அவர் பெப்ரவரி 18 அன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் 5 மற்றும் 6வது மதிப்பாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நிதியங்களின் உயர்மட்டக் குழுவினர் இலங்கைக்கு பல திட்டங்கள் ஆரம்பம் இலங்கையில் இடைநிறுத்தப்பட்ட பல திட்டங்களை மீண்டும் தொடங்கும் வகையில் உலக வங்கி பிரதிநிதிகள் அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளனர்.2022-23 பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட நெடுஞ்சாலைகள், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களை மீண்டும் தொடங்கும் வகையில் இந்த விஜயம் அமைகிறது.குறித்த திட்டங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் மற்றும் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லென் ஆகியோர் ஏற்கனவே திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவுடன் இது குறித்து ஆலோசித்துள்ளனர்.இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா பெப்ரவரி 17 அன்று இலங்கை வருகை தரவுள்ளார். அவர் பெப்ரவரி 18 அன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.இந்த விஜயத்தின் போது விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் 5 மற்றும் 6வது மதிப்பாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.