ஈரான் நாட்டில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டதாகக் கூறப்படும் சமீபத்திய தாக்குதல்கள் தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ஈரானின் தலைநகர் தெஹ்ரான்நகரில் உள்ள முக்கிய உள்கட்டமைப்பு இலக்குகளை குறிவைத்து புதிய குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிய மாணவர்கள் செய்தி நிறுவனம்வெளியிட்ட தகவலின்படி, கிழக்கு தெஹ்ரானின் பல பகுதிகள் இந்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, மத்திய ஈரானில் உள்ள Isfahan (இஸ்ஃபஹான்) நகரிலும் இன்று அதிகாலை பல வெடிப்புகள் ஏற்பட்டதாக Voice of America செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tehran (தெஹ்ரான்) நகரில் முந்தைய நாட்களுடன் ஒப்பிடும் போது இரவு முழுவதும் மிகவும் கடுமையான குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதாக தோஹித் அசாதி தெரிவித்துள்ளார்.
ஈரானின் தலைநகரிலிருந்து அவர் வழங்கிய தகவலின்படி,
சில மணி நேரங்களுக்கு முன்பு நகரம் முழுவதும், குறிப்பாக தென்கிழக்கு பகுதிகளில் இருந்து பெரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், வானில் போர் விமானங்கள் பறக்கும் சத்தங்களும் தெளிவாகக் கேட்கப்பட்டதாகவும், சில போர் விமானங்கள் தெஹ்ரான் நகரின் வானில் பறப்பதையும் காண முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில்,ஷிராஸ்,இஸ்ஃபஹான்,கெர்மன்ஷா உள்ளிட்ட ஈரானின் பல நகரங்களிலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முந்தைய நாட்களுடன் ஒப்பிடும்போது, குறிப்பாக தெஹ்ரானில் கடந்த இரவு மிகக் கடுமையான குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானில் தொடர் ஏவுகணை தாக்குதல்-நள்ளிரவில் நடந்த சோகம் ஈரான் நாட்டில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டதாகக் கூறப்படும் சமீபத்திய தாக்குதல்கள் தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னதாக, ஈரானின் தலைநகர் தெஹ்ரான்நகரில் உள்ள முக்கிய உள்கட்டமைப்பு இலக்குகளை குறிவைத்து புதிய குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஈரானிய மாணவர்கள் செய்தி நிறுவனம்வெளியிட்ட தகவலின்படி, கிழக்கு தெஹ்ரானின் பல பகுதிகள் இந்த தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.அதேவேளை, மத்திய ஈரானில் உள்ள Isfahan (இஸ்ஃபஹான்) நகரிலும் இன்று அதிகாலை பல வெடிப்புகள் ஏற்பட்டதாக Voice of America செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.Tehran (தெஹ்ரான்) நகரில் முந்தைய நாட்களுடன் ஒப்பிடும் போது இரவு முழுவதும் மிகவும் கடுமையான குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதாக தோஹித் அசாதி தெரிவித்துள்ளார்.ஈரானின் தலைநகரிலிருந்து அவர் வழங்கிய தகவலின்படி,சில மணி நேரங்களுக்கு முன்பு நகரம் முழுவதும், குறிப்பாக தென்கிழக்கு பகுதிகளில் இருந்து பெரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும், வானில் போர் விமானங்கள் பறக்கும் சத்தங்களும் தெளிவாகக் கேட்கப்பட்டதாகவும், சில போர் விமானங்கள் தெஹ்ரான் நகரின் வானில் பறப்பதையும் காண முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில்,ஷிராஸ்,இஸ்ஃபஹான்,கெர்மன்ஷா உள்ளிட்ட ஈரானின் பல நகரங்களிலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முந்தைய நாட்களுடன் ஒப்பிடும்போது, குறிப்பாக தெஹ்ரானில் கடந்த இரவு மிகக் கடுமையான குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.