• Feb 06 2026

கார் - மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து; தந்தையும் மகனும் பலியான துயரம்

Chithra / Feb 6th 2026, 7:54 am
image


காலி - அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில்  தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். 


நேற்று (05) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


பின்னதுவ அதிவேக வீதி நுழைவாயிலிலிருந்து வெளியேறி காலி நோக்கி பயணித்த கார் ஒன்று, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த இருவர் காயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு மோட்டார் சைக்கிள் சாரதியும் பின்னால் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 


இவ்வாறு உயிரிழந்தவர்கள் வலஹந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 மற்றும் 16 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் என தெரியவந்துள்ளது. 


விபத்து தொடர்பில் குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


இதேவேளை, மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேலியகொட - புத்தளம் வீதியில் மாரவில நகருக்கு அருகில், சிலாபத்திலிருந்து வென்னப்புவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி ஒருவருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 


விபத்தில் காயமடைந்த தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய  பாதசாரி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


குறித்த விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் - மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து; தந்தையும் மகனும் பலியான துயரம் காலி - அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில்  தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். நேற்று (05) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னதுவ அதிவேக வீதி நுழைவாயிலிலிருந்து வெளியேறி காலி நோக்கி பயணித்த கார் ஒன்று, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த இருவர் காயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு மோட்டார் சைக்கிள் சாரதியும் பின்னால் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் வலஹந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 மற்றும் 16 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் என தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேலியகொட - புத்தளம் வீதியில் மாரவில நகருக்கு அருகில், சிலாபத்திலிருந்து வென்னப்புவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி ஒருவருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய  பாதசாரி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement