வவுனியா பூந்தோட்டம் சந்திப்பகுதியில் அனுமதி இன்றி அமைக்கப்பட்டிருந்த கொட்டகை நகரசபையால் அகற்றப்பட்டது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள வியாபாரநிலையத்தினை ஒட்டி பிரதானவீதியின் கரையினை ஆக்கிரமித்து குறித்த கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நகரசபையின் உத்தரவிற்கமைய அது இன்றையதினம் அகற்றப்பட்டிருந்தது.