நேபாளத்தில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் திட்டமிடப்பட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய கெஹல்பத்தர பத்மேவின் குழுவை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மலேசியா மற்றும் துபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதாகவும் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, "கணேமுல்ல சஞ்சீவ" கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் அறுவரை இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளதாக நேபாள நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதாள உலகத் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலையில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு சந்தேகநபர்களும், நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அவர்களில் இஷாரா செவ்வந்தி, கொழும்பு குற்றப்பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற 05 சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களில் 26 வயதுடைய இஷாரா செவ்வந்தி உட்பட நேபாளத்தில் இருந்து நாடுக்கடத்தப்பட்ட 33 வயதுடைய ஜீவதாசன் கனராசா, 23 வயதுடைய தக்ஷி நந்தகுமார், 49 வயதுடைய தினேஷ் ஷ்யாமந்த டி செல்வா, 35 வயதுடைய கெனடி பெஸ்தியம்பில்லே மற்றும் 43 வயதாக தினேஷ் நிஷாந்த குமார விக்ரமசிங்க ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் திட்டமிடப்பட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய கெஹல்பத்தர பத்மேவின் குழுவை சேர்ந்தவர்கள் என காவல்துறை விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.
அவர்கள் மலேசியா மற்றும் துபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக நேபாள அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர்கள் நேபாளத்தில் எந்த குற்றமும் செய்யாததால், நேபாள சட்டத்தின்படி அவர்களை நாடு கடத்த குடிவரவுத் துறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டத்தின்படி அபராதம் செலுத்திய பின்னர், அவர்கள் காவல்துறை மேற்பார்வையின் கீழ், இலங்கை காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் தஞ்சம் புகுந்த இலங்கை பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் தொடர்பில், இதுபோன்ற வழக்குகள் மிகவும் அரிதானவை என்று சர்வதேச காவல் நிறுவனம் (INTERPOL) அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்த விரைவான நாடுகடத்தலுக்கு நேபாள காவல்துறைக்கும், இலங்கை தூதரகத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது என்றும் அந்த அறிக்கைகள் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஷாராவுடன் சிக்கிய ஐவர் தொடர்பில் அதிர்ச்சி தகவல்; நேபாள அதிகாரிகள் கூறியது இதுதான். நேபாளத்தில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் திட்டமிடப்பட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய கெஹல்பத்தர பத்மேவின் குழுவை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மலேசியா மற்றும் துபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதாகவும் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, "கணேமுல்ல சஞ்சீவ" கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் அறுவரை இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளதாக நேபாள நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதாள உலகத் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலையில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஆறு சந்தேகநபர்களும், நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களில் இஷாரா செவ்வந்தி, கொழும்பு குற்றப்பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற 05 சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்களில் 26 வயதுடைய இஷாரா செவ்வந்தி உட்பட நேபாளத்தில் இருந்து நாடுக்கடத்தப்பட்ட 33 வயதுடைய ஜீவதாசன் கனராசா, 23 வயதுடைய தக்ஷி நந்தகுமார், 49 வயதுடைய தினேஷ் ஷ்யாமந்த டி செல்வா, 35 வயதுடைய கெனடி பெஸ்தியம்பில்லே மற்றும் 43 வயதாக தினேஷ் நிஷாந்த குமார விக்ரமசிங்க ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் திட்டமிடப்பட்ட குற்றச் செயலுடன் தொடர்புடைய கெஹல்பத்தர பத்மேவின் குழுவை சேர்ந்தவர்கள் என காவல்துறை விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் மலேசியா மற்றும் துபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக நேபாள அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகநபர்கள் நேபாளத்தில் எந்த குற்றமும் செய்யாததால், நேபாள சட்டத்தின்படி அவர்களை நாடு கடத்த குடிவரவுத் துறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டத்தின்படி அபராதம் செலுத்திய பின்னர், அவர்கள் காவல்துறை மேற்பார்வையின் கீழ், இலங்கை காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தில் தஞ்சம் புகுந்த இலங்கை பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் தொடர்பில், இதுபோன்ற வழக்குகள் மிகவும் அரிதானவை என்று சர்வதேச காவல் நிறுவனம் (INTERPOL) அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்த விரைவான நாடுகடத்தலுக்கு நேபாள காவல்துறைக்கும், இலங்கை தூதரகத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது என்றும் அந்த அறிக்கைகள் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.