அமெரிக்காவில், சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
அமெரிக்காவின், காலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பார்க் நகரில் சீன புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற இருந்த நிலையில், சனிக்கிழமை இரவு ஒருவர் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
அமெரிக்க நேரப்படி, நேற்றிரவு 10 மணியளவில், மான்டேரி பார்க்கிலும், அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் சீன புத்தாண்டை வரவேற்கும் விதமாக கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. அந்த நேரத்தில்தான் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு. 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு அமெரிக்காவில், சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அமெரிக்காவின், காலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பார்க் நகரில் சீன புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற இருந்த நிலையில், சனிக்கிழமை இரவு ஒருவர் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அமெரிக்க நேரப்படி, நேற்றிரவு 10 மணியளவில், மான்டேரி பார்க்கிலும், அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் சீன புத்தாண்டை வரவேற்கும் விதமாக கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. அந்த நேரத்தில்தான் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.