செக் குடியரசின் தலைநகரான பிராகாவில் அமைந்துள்ள பிராகா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 12 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இறந்துவிட்டதாக செக் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுப்புற வீதிகளை விட்டு வௌியேறுமாறும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறும் பொலிஸார் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.