• Sep 17 2024

கனடாவில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி, ஐவர் காயம்

Tharun / Jun 3rd 2024, 6:27 pm
image

Advertisement

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் காயமடைந்ததுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சம்பவம் எட்டோபிகோக் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக ரொறொன்ரோ காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,  கிப்லிங் அவென்யூ மற்றும் மவுண்ட் ஆலிவ் டிரைவிற்கு அருகில் அமைந்துள்ள நார்த் அல்பியன் கல்லூரியின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 50 வயதுடைய நபர் ஒருவர்  பலியாகியுள்ள நிலையில் மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கனடாவில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி, ஐவர் காயம் கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் காயமடைந்ததுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.குறித்த சம்பவம் எட்டோபிகோக் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக ரொறொன்ரோ காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,  கிப்லிங் அவென்யூ மற்றும் மவுண்ட் ஆலிவ் டிரைவிற்கு அருகில் அமைந்துள்ள நார்த் அல்பியன் கல்லூரியின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் 50 வயதுடைய நபர் ஒருவர்  பலியாகியுள்ள நிலையில் மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய காவல்துறையினர் கூறியுள்ளனர்.மேலும், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement