• Oct 17 2024

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு; முச்சக்கர வண்டியில் பயணித்தவர் சாவு

Chithra / Oct 16th 2024, 4:52 pm
image

Advertisement

 

கொழும்பு, கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு காரில் வந்த மர்ம நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

35 வயதுடைய நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் மாதம்பிட்டியவில் உள்ள மயானம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று இரவு மாத்தறை - கேகனதுர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு; முச்சக்கர வண்டியில் பயணித்தவர் சாவு  கொழும்பு, கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.சம்பவ இடத்திற்கு காரில் வந்த மர்ம நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 35 வயதுடைய நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் மாதம்பிட்டியவில் உள்ள மயானம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை, நேற்று இரவு மாத்தறை - கேகனதுர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement