• Oct 22 2024

மாத்தறையில் துப்பாக்கி சூடு- இரு சந்தேக நபர்கள் கைது..!

Sharmi / Oct 21st 2024, 11:48 am
image

Advertisement

மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 15ஆம் திகதி மாத்தறை நாவிமன பகுதியில் காரில் வந்த இருவரால் 26 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு உதவிய இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் தென் மாகாண நடவடிக்கை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





மாத்தறையில் துப்பாக்கி சூடு- இரு சந்தேக நபர்கள் கைது. மாத்தறையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த 15ஆம் திகதி மாத்தறை நாவிமன பகுதியில் காரில் வந்த இருவரால் 26 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு உதவிய இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.விசேட அதிரடிப்படையின் தென் மாகாண நடவடிக்கை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement