• May 03 2024

முல்லைத்தீவில் டிப்பர் மீது துப்பாக்கி சூடு...! ஒருவர் கைது...!

Sharmi / Mar 15th 2024, 8:49 am
image

Advertisement

முல்லைத்தீவில்  டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் நேற்றையதினம்(14) பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவில் நேற்றையதினம்(14) பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து  விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இந்நிலையில், முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான், கற்சிலைமடு பகுதியில்  சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது அவ் வீதியால்  பயணித்த சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்றை பொலிஸார் வழிமறித்தனர்.

எனினும்,  பொலிஸாரின் கட்டளையையும் மீறி குறித்த டிப்பர் வாகனம் செல்லத் தொடங்கிய நிலையில் டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடாத்தி, வாகனத்தை நிறுத்தியதுடன் டிப்பர் வாகனத்தின் சாரதியையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


முல்லைத்தீவில் டிப்பர் மீது துப்பாக்கி சூடு. ஒருவர் கைது. முல்லைத்தீவில்  டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் நேற்றையதினம்(14) பதிவாகியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவில் நேற்றையதினம்(14) பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து  விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.இந்நிலையில், முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான், கற்சிலைமடு பகுதியில்  சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது அவ் வீதியால்  பயணித்த சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்றை பொலிஸார் வழிமறித்தனர்.எனினும்,  பொலிஸாரின் கட்டளையையும் மீறி குறித்த டிப்பர் வாகனம் செல்லத் தொடங்கிய நிலையில் டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடாத்தி, வாகனத்தை நிறுத்தியதுடன் டிப்பர் வாகனத்தின் சாரதியையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement