• Sep 17 2024

சிங்கள பேரினவாதம் எமது மக்களை சிதறடிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளைக் கையாளுகின்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். எஸ். ஸ்ரீநேசன் தெரிவிப்பு..!samugammedia

Tharun / Feb 25th 2024, 9:00 pm
image

Advertisement

தமிழ் மக்களின் ஒற்றுமையினை சிதைப்பதற்காக சிங்களப் பேரினவாதம் பல வழிகளைக் கையாள்கிறது என மட்டகளப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். 

சாவகச்சேரியில்  நடைபெற்ற தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதி அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ஒற்றுமைப்பட்டு நிற்கின்ற தமிழ்மக்கைளை அவர்களை பிரிப்பதற்காக அவர்களின் ஒற்றுமையைச் சிதைப்பதற்காக சிங்களப் பேரினவாதம் ஐந்து “ப” க்களை பயன்படுத்துகின்றது. அவை பணம் கொடுத்தல், பதவி கொடுத்தல், பயமுறுத்தல், பணயம் வைத்தல், படுகொலை செய்தல் என்பவையாகும். கடந்த காலங்களில் வரவு செலவுத்திட்டத்தில் தங்களுக்குச் சார்பாக வாக்களிக்க வைப்பதற்காக பணயம் வைக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. என்று குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் எமது அரசியல் சக்திகள் காலத்துக்குக் காலம் தமிழ்தேசியப் பாதையில் நின்று தடம் மாறுகின்ற போது அல்லது தங்களை அறியாமல் தடம் புரளுகின்ற போது சிறுவர்கள் தவறு விடும் போது அவர்களுக்கு சரி, பிழைகளை எடுத்துச் சொல்லி வழிப்படுத்துவது போல். எமக்கு ஒரு மூதவை அவசியம் அந்த மூதவையில் சுயநலமற்ற புத்திஜீவிகள், ஆன்மீகத் தலைவர்கள் போன்றோர் காணப்பட வேண்டும். அவர்கள் தமிழ் தேசியத்தின் வழி நின்று தவறுகின்ற அரசியல் சக்திகளை வழிநடத்துபவர்களாக இருக்கவேண்டும். என்று குறிப்பிட்டார்.

சிங்கள பேரினவாதம் எமது மக்களை சிதறடிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளைக் கையாளுகின்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். எஸ். ஸ்ரீநேசன் தெரிவிப்பு.samugammedia தமிழ் மக்களின் ஒற்றுமையினை சிதைப்பதற்காக சிங்களப் பேரினவாதம் பல வழிகளைக் கையாள்கிறது என மட்டகளப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில்  நடைபெற்ற தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதி அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ஒற்றுமைப்பட்டு நிற்கின்ற தமிழ்மக்கைளை அவர்களை பிரிப்பதற்காக அவர்களின் ஒற்றுமையைச் சிதைப்பதற்காக சிங்களப் பேரினவாதம் ஐந்து “ப” க்களை பயன்படுத்துகின்றது. அவை பணம் கொடுத்தல், பதவி கொடுத்தல், பயமுறுத்தல், பணயம் வைத்தல், படுகொலை செய்தல் என்பவையாகும். கடந்த காலங்களில் வரவு செலவுத்திட்டத்தில் தங்களுக்குச் சார்பாக வாக்களிக்க வைப்பதற்காக பணயம் வைக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. என்று குறிப்பிட்டார்.அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில் எமது அரசியல் சக்திகள் காலத்துக்குக் காலம் தமிழ்தேசியப் பாதையில் நின்று தடம் மாறுகின்ற போது அல்லது தங்களை அறியாமல் தடம் புரளுகின்ற போது சிறுவர்கள் தவறு விடும் போது அவர்களுக்கு சரி, பிழைகளை எடுத்துச் சொல்லி வழிப்படுத்துவது போல். எமக்கு ஒரு மூதவை அவசியம் அந்த மூதவையில் சுயநலமற்ற புத்திஜீவிகள், ஆன்மீகத் தலைவர்கள் போன்றோர் காணப்பட வேண்டும். அவர்கள் தமிழ் தேசியத்தின் வழி நின்று தவறுகின்ற அரசியல் சக்திகளை வழிநடத்துபவர்களாக இருக்கவேண்டும். என்று குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement