யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியின் பங்கேற்புடன் இன்று இடம்பெறும் சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் யாழ் பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத் தடையுத்தரவை காரணம் காட்டி யாழ்ப்பாணம் பொலிஸாரால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் 17 பேர் கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கபட்டுள்ளவர்களை பார்வையிடுவதற்காக வேலன் சுவாமிகள் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் அனந்தி சசிதரன் உள்ளிட்ட குழுவினர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.