• Oct 19 2024

கொழும்பில் இரு உயிர்களை பலியெடுத்த துப்பாக்கிச் சூடு - அறுவர் கைது! - விசாரணைக்கு 10 பொலிஸ் குழுக்கள் நியமனம்

Chithra / Jul 9th 2024, 8:25 am
image

Advertisement


கொழும்பு -  உள்ள வணிக கட்டடத்தில்  நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அத்துருகிரியவில்வணிக கட்டடத்தின் உரிமையாளர் உட்பட 06 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குழுவுடன் வணிக கட்டடத்தின் உரிமையாளரும் தொடர்புடையவர் என பொலிஸார்  குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் அத்துருகிரியவில் நேற்று பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு 10 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.  

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் க்ளப் வசந்த உள்ளிட்ட 2 பேர் கொல்லப்பட்டதுடன், 

பாடகி சுஜீவா உள்ளிட்ட 4 பேர் காயமடைந்துள்ளனர்.  

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய இரண்டு வாகனங்கள் இருவேறு இடங்களிலிருந்து மீட்கப்பட்டது.

மேலும் காயமடைந்த பாடகி கே. சுஜீவா  தற்போது  நலமாக இருப்பதாகவும், கால் துண்டிக்கப்படாமல் காப்பாற்ற முடிந்தது எனவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான கூறினார். 

பாடகி கே. சுஜீவா மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவர் என்பதோடு, பிரபல பாடகர் மகிந்த குமாரின் சகோதரியும் ஆவார்.

இவர் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பல பாடல்களைப் பாடி மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கொழும்பில் இரு உயிர்களை பலியெடுத்த துப்பாக்கிச் சூடு - அறுவர் கைது - விசாரணைக்கு 10 பொலிஸ் குழுக்கள் நியமனம் கொழும்பு -  உள்ள வணிக கட்டடத்தில்  நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அத்துருகிரியவில்வணிக கட்டடத்தின் உரிமையாளர் உட்பட 06 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குழுவுடன் வணிக கட்டடத்தின் உரிமையாளரும் தொடர்புடையவர் என பொலிஸார்  குறிப்பிட்டுள்ளனர்.இந்நிலையில் அத்துருகிரியவில் நேற்று பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு 10 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.  இந்தத் தாக்குதல் சம்பவத்தில் க்ளப் வசந்த உள்ளிட்ட 2 பேர் கொல்லப்பட்டதுடன், பாடகி சுஜீவா உள்ளிட்ட 4 பேர் காயமடைந்துள்ளனர்.  சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய இரண்டு வாகனங்கள் இருவேறு இடங்களிலிருந்து மீட்கப்பட்டது.மேலும் காயமடைந்த பாடகி கே. சுஜீவா  தற்போது  நலமாக இருப்பதாகவும், கால் துண்டிக்கப்படாமல் காப்பாற்ற முடிந்தது எனவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான கூறினார். பாடகி கே. சுஜீவா மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவர் என்பதோடு, பிரபல பாடகர் மகிந்த குமாரின் சகோதரியும் ஆவார்.இவர் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பல பாடல்களைப் பாடி மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement