யாழ் வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்குவலையால் அதிகளவான மீனவர்கள் தொழிலை இழந்துள்ளனர்
சட்டவிரோத சுருக்குவலை தொழிலுக்கு நாளாந்தம் அதிகளவான மீன்பிடி படகுகள் சென்று ஐம்பதாயிரம் கிலோவிற்கும் அதிகளவான மீன்களை பிடித்து வருவதால் சிறு தொழிலாளிகள் தங்களின் வருமானத்தை இழந்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்
சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடியில் அதிகளவான மீன்கள் பிடிபடுவதால் சிறு தொழிலாளிகள் பிடிக்கும் மீன்களின் விலை சந்தைகளில் குறைந்துள்ளது.
இதனால் அதிகளவான மீனவர்களின் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை நிறுத்தியுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவோரை விளக்கமறியலில் வைப்பதுடன் அவர்களின் படகுகளும் தடுத்து வைக்கப்படுகின்றது. ஆனால் வடமராட்சி கிழக்கில் அவ்வாறு இல்லை, கைது செய்யப்படுபவர்கள் உடன் விடுவிக்கப்படுவதால் எமது கடல் வளம் அழிந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுத்து சட்டவிரோத மீன்பீடி முறையை முற்றாக நிறுத்தி எமது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்
தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்குவலையால் - கடலுக்கு செல்வதை நிறுத்திய சிறு தொழிலாளிகள் யாழ் வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் தலை தூக்கியுள்ள சட்டவிரோத சுருக்குவலையால் அதிகளவான மீனவர்கள் தொழிலை இழந்துள்ளனர் சட்டவிரோத சுருக்குவலை தொழிலுக்கு நாளாந்தம் அதிகளவான மீன்பிடி படகுகள் சென்று ஐம்பதாயிரம் கிலோவிற்கும் அதிகளவான மீன்களை பிடித்து வருவதால் சிறு தொழிலாளிகள் தங்களின் வருமானத்தை இழந்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடியில் அதிகளவான மீன்கள் பிடிபடுவதால் சிறு தொழிலாளிகள் பிடிக்கும் மீன்களின் விலை சந்தைகளில் குறைந்துள்ளது.இதனால் அதிகளவான மீனவர்களின் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை நிறுத்தியுள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுமுல்லைத்தீவில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவோரை விளக்கமறியலில் வைப்பதுடன் அவர்களின் படகுகளும் தடுத்து வைக்கப்படுகின்றது. ஆனால் வடமராட்சி கிழக்கில் அவ்வாறு இல்லை, கைது செய்யப்படுபவர்கள் உடன் விடுவிக்கப்படுவதால் எமது கடல் வளம் அழிந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுஇது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுத்து சட்டவிரோத மீன்பீடி முறையை முற்றாக நிறுத்தி எமது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டுமென அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்